வாசிங்டன், ஜூன் 8– முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி அமெரிக்கா பெரியார் – அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பில் இணைய வழி கருத்தரங்கம் 3. 6 .2024 அன்று இரவு 9 மணிக்கு எக்ஸ் தளம் வழியே நடைபெற்றது.
நிகழ்ச்சியை ம. வீ. கனிமொழி ஒருங்கிணைத்தார். சிறப்பு அழைப்பாளராக கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் கலந்து கொண்டு “இன்றும் என்றும் கலைஞர்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். தலைவர் கலைஞரின் பன்முக ஆளுமையை, பொற்கால ஆட்சியின் சிறப்பை, துறைகளிலும் தமிழ்நாட்டை உயர்த்தி காட்டிய உன்னதத்தை, தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை இறுதிவரை பற்றி கொண்டிருந்த பான்மையை தமது உரையில் குறிப்பிட்டார்.
நிகழ்வில் பங்கேற்றவர்களின் கேள்விக்கு இறுதியாக பதிலளித்தார்.
கேட்கப்பட்ட கேள்விகள்;
கனடா ஆசிப்: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பிரச்சினையில் இன்னமும் வேறு ஏதாவது தடைகள் உள்ளதா?ரவிக்குமார்: சமத்துவபுரம் திட்டம் சிறப்பாக செயல்படுகிறதா?
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் /இட ஒதுக்கீடு எது சரி?
பப்பிக்குட்டி: இப்போது கலைஞர் இருந்திருந்தால் மக்களுக்கான அவரின் தேவை என்னவாக இருந்திருக்கும்?
தோழர் மோகன்: குலக்கல்வி திட்டத்தை பெரியார் எதிர்த்து முறியடித்ததை போல இப்போதும் புதிய கல்விக் கொள்கை ( தேசிய கல்விக் கொள்கை) எதிர்த்து முறியடிக்க முடியவில்லையே-ஏன்?
இது போன்ற தோழர்களின் கேள்விகளுக்கு கழகப் பொதுச் செயலாளர் சிறப்பான பதிலை வழங்கினார்.
நிகழ்வில் சுபாஷ் ,அறிவுப் பொன்னி, எழில் வடிவன், மோகன், ரவிக்குமார், ஆசிப், பப்பிக்குட்டி, பன்னீர்செல்வம், கலைச்செல்வி மற்றும் தோழர்கள் இணைந்திருந்தனர்.