மக்களவையில் புதிய உறுப்பினர்கள் 280 பேர்

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூன் 8- மக்களவை தேர்தலின் மூலம் முதல்முறையாக 280 எம்பிக்கள் மக்களவைக்கு உள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 267 மக்களவை உறுப்பினர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது அதுவே அதிக எண்ணிக்கையிலான மக்களவை உறுப்பினர்களாக கருதப்பட்டது.

தற்போது மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 263 வேட்பாளர்களும் ஏற்கெனவே மக்களவையில் உறுப்பினர் பதவி வகித்தவர்களே. கூடுதலாக, 16 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்படவிருக்கிறார்கள். மற்றுமொரு எம்பி ஏற்கெனவே மக்களவையில் ஏழு முறை பதவி வகித்தவர். மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களில் 8 பேர் தங்களது முந்தைய தொகுதியிலிருந்து மாறுபட்டு புதிய தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார்கள். ஒருவர் இரண்டாம் முறையாக இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றிருக்கிறார். இதுதவிர கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட கட்சியிலிருந்து விலகி கட்சித்தாவல் செய்து இம்முறை வெற்றி பெற்று எம்பியானவர்கள் ஒன்பது பேர். கடந்த ஆட்சியில் அமைச்சர் பதவி வகித்து இம்முறை தேர்தலில் போட்டியிட்ட 53 பேரில் 35 பேர் வாகை சூடியுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *