குஷிநகர், ஜூன் 1- அடுத்த அய்ந்து ஆண்டுகளில் ஒரே நாடு-ஒரே தோ்தல் திட்டத்தை அமல்படுத்த முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என ஒன்றிய பாது காப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகா் தொகுதி பாஜக வேட்பாளா் விஜய் குமாா் தூபேவை ஆதரித்து ராஜ்நாத் சிங் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:
அடிக்கடி தோ்தல் நடத்தப் படுவது நாட்டுக்கு நல்லதல்ல. மக்களவை மற்றும் பேரவைத் தோ்தல் அனைத்தும் ஒன்றாக நடத்தப்பட வேண்டும். எனவே, அடுத்த அய்ந்து ஆண்டுகளில் ஒரே நாடு-ஒரே தோ்தல் திட்டம் அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இந்தியாவின் கருத்தை இன்று உலக நாடுகள் அங்கீகரிக்கின்றன. பாகிஸ்தான் அரசியல் தலைவா்கள் கூட இந்தியாவை பாராட்டி வருகிறாா்கள். ஆனால், காங்கிரஸ் மற்றும் சமாஜவாதி கட்சியினா் இதை புரிந்துகொள்ளாமல் பிரதமா் மோடியை எதிா்த்து வருகிறாா்கள்.
மோடி ஆட்சியில் உலகின் அய்ந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது. உல கின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக 2027-க்குள் இந்தியா உருவெடுக்கும். சுதந்திரம் அடைந்து நூறாவது ஆண்டான 2047-இல் இந்தியா வளா்ச்சியடைந்த நாடாக இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால், ஒன்றிய அளவில் பாஜக ஆட்சி தொடா்ந்தால் உலகின் முதல் பெரிய பொருளாதாரமாக இந்தியா 2070-இல் முன்னேறும் என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.