ஒன்றிய அமைச்சரின் வீட்டில் இளைஞர் சுட்டுக்கொலை – அமைச்சர் மகனின் துப்பாக்கி பறிமுதல்

1 Min Read

லக்னோ,செப்.2– ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் கவுஷல் கிஷோர். இவரது வீடு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ வில் உள்ளது. ஒன்றிய அமைச்சர் கவுஷல் கிஷோருக்கு விகாஸ் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் கவுஷல் வீட்டில் நேற்று (1.9.2023) இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட் டுள்ளார். வினய் சீனிவாசன் என்ற அந்த இளைஞர் ஒன்றிய அமைச்சர் மகன் விகாஷின் நண்பர் ஆவார். ஒன்றிய அமைச்சர் விகாஷின் உரிமம் பெற்ற துப்பாக்கியால் இளைஞர் சீனிவாசன் சுட்டுக் கொல்லப்பட்டுள் ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கி தன் மகன் விகாஷ் உடையது தான் என கூறிய ஒன்றிய அமைச்சர் ஆனால் சம்பவம் நடந்த போது தன் மகன் வீட்டில் இல்லை என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். ஒன்றிய அமைச்சரின் மகன் எங்கு உள்ளார்? என்பது குறித்த தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *