குன்னூரில் பெரியாரியல் பயிற்சி பட்டறை தொடங்கியது

Viduthalai
1 Min Read

அரசியல்


குன்னூர்,செப்.2
– நீலமலை மாவட்டம், குன்னூர், ரெயிலிகாம்பௌன்ட்-ராக்பிரோடு, டாக்டர் கவுதமன் இல்லத்தில் இன்று (2.9.2023) பெரியாரியல் பயிற்சி பட்டறை தொடங்கியது. மாவட்ட துணைத் தலைவர் யா.சத்தியநாதன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் மு.நாகேந்திரன் தலைமையேற்று உரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் சி. இராவணன், மாவட்ட ப.க. தலைவர் ஈஸ்வரன், மாவட்ட ப.க. செயலாளர் இரா.வாசுதேவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சா.ஜீவா ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினார். தந்தை பெரியார் மருத்துவக் குழும மாநில தலைவர் டாக்டர் இரா கவுதமன் பயிற்சிப் பட்டறையினை தொடங்கி வைத்து உரையாற்றினார். பேராசிரியர் ப.காளிமுத்து தந்தை பெரியார் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சி பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார். தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *