சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு நற்சான்றிதழ் சென்னை மாநகர ஆணையர் வழங்கினார்

1 Min Read

சென்னை, நவ. 27- சென்னை காவல்துறை யில் சிறப்பாக பணியாற் றிய காவல்துறை தேர்வு செய்து அவர்களுக்கு மாதந்தோறும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, காவல் துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்து நற் சான்றிதழ் வழங்கி கவுர வித்து வருகிறார்.

அந்த வகையில் இந்த மாதம் சிறப்பாக பணியாற் றிய 35 காவலர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நற் சான்றிதழ் வழங்கி ஆணை யர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்தார். 

விரல்ரேகை பிரிவு கூடுதல் கண்காணிப்பா ளர் கலைகண்ணகி, காவல் கரங்கள் ஆய்வா ளர் மேரிராஜு, முக்கிய குற்றங்கள் பிரிவு ஆய்வா ளர் சிறீதர், மடிப்பாக்கம் ஆய்வாளர் விஸ்வநாதன் மற்றும் 10 சப்-_ஆய்வாளர் கள், 22 காவலர்கள் பாராட்டு சான்றிதழ் பெற் றோர் பட்டியலில் உள்ள னர். யானைகவுனி பகுதி யில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.2 கோடி பணத்தை ஆட்டோவில் கொண்டு வந்தவர்களை பணத்துடன் காவல் துறையில்  ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சுந் தர்ராஜையும் நேரில் அழைத்து ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் கூடு தல் ஆணையர்கள் சுதாகர், கபில்குமார் சி சரத்கர் ஆகி யோரும் கலந்து கொண்ட னர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *