அகில இந்திய பாங்க் ஆப் பரோடா ஓபிசி நல சங்கத்தின் 8ஆவது அகில இந்திய கருத்தரங்கக் கூட்டம் & 30ஆம் ஆண்டு விழா சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்றது

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்நாடுதமிழ்நாடு

சென்னை, மே27- அகில இந்திய பாங்க் ஆப் பரோடா ஓபிசி நல சங்கத்தின் 8ஆவது அகில இந்திய கருத்தரங்கக் கூட்டம் மற்றும் சங்கத்தின் 30ஆம் ஆண்டு விழா நேற்று (26.5.2024) காலை 10 மணிக்கு சென்னையில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் ஹோட்டல் அபு பேலஸ் விடுதி அரங்கில் நடைபெற்றது.
பாங்க் ஆப் பரோடா பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் நலச்சங்கத் தலைவர் அமித் ஜாதவ் தலைமை உரையாற்றினார். பாங்க் ஆப்பரோடா பிற்படுத்தப்பட்ட பணியா ளர்கள் நலச்சங்கப் பொதுச்செயலாளர் எம்.ஜார்ஜ் பெர்னாண் டஸ் வரவேற்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல்.திருமாவளவன் தலைமை யேற்று சிறப்புரை ஆற்றினார்.
ராஷ்டிரிய சமாஜ் கட்சியின் நிறுவனரும் மகாராட்டிரா மேனாள் அமைச்சருமான மகாதேவ் ஜங்கர், பாங்க் ஆப் பரோடா சென்னை மண்டல பொது மேலாளர் சரவ ணக்குமார், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, ராஷ்டிரிய சமிதி கட்சி மேனாள் அமைச்சர் எஸ்.எல். அக்கிசாகர், மூத்த வழக்குரைஞர் ஆர்.நடராஜன், (ஓபிசி வாய்ஸ் இதழாசிரியர் குழு) ஊழியர்கள் நலச் சங்கங்களின் தலைவர்கள், வங்கியின் உயர் அதிகாரிகள், பிற்படுத்தப்பட்டோர் நல சங்க அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
பொருளாளர் சி.ஜெயக்குமார் நன்றி கூறினார்.
நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் பாங்க் ஆப் பரோடாவின் 18 மண்டலங்களிலிருந்தும் ஓபிசி நலச் சங்கத்தினர் பெருமளவில் திரண்டு கருத்தரங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *