கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையப் பணிகள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆலோசனை

1 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, செப்.3 கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையப் பணிகள் தொடர்பாக இந்து சமய அற நிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர் பாபு ஆலோசனை நடத்தினார்.

 சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமக் கூட்டரங்கில், 1.9.2023 அன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்திலிருந்து பேருந்துகள் போக்குவரத்து நெரி சலின்றி செல்வதற்காக சாலை அமைக்கும் பணிகள், முடிச்சூரில் புதிதாக அமையவுள்ள ஆம்னி பேருந்து நிறுத்திமிடத்தில் நடை பெறும் பணிகள் குறித்தும், மழை நீர் வடிகால் பணிகள், திடக்கழிவு மேலாண்மை, பூங்காக்களில் நடைபெற்று வரும் பணிகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையத் தில் அமையவுள்ள மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம் குறித்தும் அமைச்சர் ஆலோசனை செய்தார். மேலும், குத்தம்பாக்கத் தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து முனையத்தில் நடை பெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்தும், மழைநீர் வடிகால் அமைப்பு குறித்தும், சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையிலி ருந்து  பேருந்து நிலையத்துக்குச் செல்லும் அணுகு சாலை அமைப் பது குறித்தும் ஆய்வு செய்தார். 

இந்தப் பேருந்து முனையத்தில் மாநகர பேருந்துகள் நிறுத்தம், புறநகர் பேருந்துகள் நிறுத்தம், பேருந்துகளை பராமரிப்பதற்கான பணிமனை, தனியார் பேருந்துகள் நிறுத்தம், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவ தற்கான இடம் உள்ளிட்ட வசதிகள் குறித் தும் ஆலோசனை நடத்தினார். 

இந்தக் கூட்டத்தில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர்அபூர்வா, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர்செயலர் அன்சூல்மிஸ்ரா, மாநகர் போக்கு வரத்து கழக நிர்வாக இயக்குநர் குணசேகரன், அரசு விரைவு போக் குவரத்து கழக நிர்வாக இயக்குநர் இளங்கோவன், தாம்பரம் கூடுதல் துணை ஆணையர் (போக்கு வரத்து) அன்வர்பாஷா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *