புதிய முயற்சி: பேருந்து – மெட்ரோ – மின் ரயிலில் ஒரே பயணச்சீட்டில் பயணிக்க ஒப்பந்தம்

Viduthalai
1 Min Read

சென்னை, மே 20- சென்னையில் பொதுப் போக்குவரத்துக்காக மெட்ரோ ரயில், மாநகர பேருந்து கள், புறநகர் மின்சார ரயில்கள் ஆகியவை இயக்கப்படுகின்றன. இதில், வெவ்வேறு கட்டண முறை மற்றும் பயணச் சீட்டு வழங்கும் முறை நடைமுறையில் இருக்கிறது.
ஒரு நபர் அடுத்தடுத்து இந்த சேவைகளை பயன்படுத்தும்போது, இந்த வேறுபட்ட பயணச் சீட்டு முறையால், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இதற்காக, ஒருங்கிணைந்த முறையில், ஒரே பயணச் சீட்டு நடைமுறையை கொண்டு வர திட்டமிடப்பட்டது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்கு வரத்து குழுமமான கும்டா இதற் கான நடவடிக்கைகளை தொடங் கியது.
சென்னையில் பல்வேறு போக் குவரத்து சேவைகளை பயன்படுத்த பொதுவான, க்யூஆர் குறியீடு
வாயிலாக பயணச் சீட்டு வழங்கும் முறையை அமல்படுத்த, ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற் கான சாத்தியக்கூறுகள் தனியார் ஆலோசகர் மூலமாக பெறப் பட்டது.

இதையடுத்து, பொதுவான பய ணச் சீட்டு முறைக்கான தொழில் நுட்பத்தை உருவாக்க ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், எந்த நிறுவனத் தின் தொழில்நுட்பம் ஏற்றது என்பதை முடிவு செய்வதற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வரு கின்றன.
இது தொடர்பாக இறுதி முடிவு ஜூனில் எடுக்கப்பட உள் ளது.
இது குறித்து கும்டா அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒப்பந்தப் புள்ளி தொடர்பாக ஜூன் இறுதி யில் முக்கிய முடிவுகள் எடுக்கப் படும். முதலில், மாநகர பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் ஒரே பயணச் சீட்டு என்ற முறை அமல்படுத்த திட்டமிடப்பட் டுள்ளது.
அதாவது, இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்பிறகு, மின்சார ரயிலில் இந்த முறை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *