இடிப்பவர்கள் அல்ல நாங்கள் – நாட்டை கட்டமைப்பவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை

Viduthalai
1 Min Read

சென்னை, மே 20- தமிழ்நாடு காங் கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காங்கிரஸுக்கு கோவிலை இடிப் பது வழக்கம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங் கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம்:
“நாடாளுமன்றத் தேர்தல் அய்ந்தாம் கட்டத்தை நெருங்கி வருகிறது. நான்கு கட்ட தேர்தல் சரியான முறையில் நடைபெற்றது. நான்கு கட்ட தேர்தல் முடிவுக்குப் பிறகு தோல்வி பயத்தில் பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசி வரு கிறார்.
பிரதமர் மோடி முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார். மத அரசியல், சாதிய அரசியல், மொழி அரசியல் செய்யக்கூடாது என்று அரசியல் சட்டம் உள்ளது.

பிரதமர் மோடி அரசியல் சட் டத்தை பின்பற்றாமல் சட்டத்துக்கு புறம்பாக பேசி வருகிறார். தற் போது கலவர அரசியலில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார்.
இவை அனைத்தையும் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து வருகிறது. யார் வெறுப்பு அரசியல், பேசினாலும் கலவரத்தை தூண் டும் வகையில் பேசினாலும் அவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவருடைய பிரச்சாரத் திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
நாங்கள் நாமமும் போடுவோம் பட்டையும் போடுவோம். 100 சதவீதம் கோயிலை கட்டிய பிறகு தான் நிறுவ வேண்டும் என சட்டம் சொல்கிறது.
ஆனால் கட்டட பணி முடி யாமலே ராமர் கோயிலை திறந் தார் பிரதமர் மோடி. கோயிலை கட்டுவதுதான் காங்கிரஸின் வழக் கம், இடிப்பது அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *