உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஃபில் தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

Viduthalai
1 Min Read

அரசியல்


சென்னை, செப். 5-
  உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தில் எம்ஃபில் தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக் கலாம். தமிழ் மொழி வளர்ச்சிக் கென தமிழ்நாடு அரசால் தோற்று விக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி பணிகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்பு டன், தமிழ் ஆய்வியல் நிறைஞர் (M.Phil Tamil- எம்ஃபில் தமிழ்), இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. அந்த வகையில் 2023-2024ஆ-ம் கல்வி ஆண்டுக்கான தமிழ் ஆய்வி யல் நிறைஞர் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. இப்பட்டப் படிப்புக்கான கல்விக் கட்டணம் ரூ.4,500. விண் ணப்பங்கள் மற்றும் சேர்க்கைத் தொடர்பான விதிமுறைகள், தக வல்களை www.ulakaththamizh.in  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இருபாலருக்கெனத் தனித்தனியே கட்டணமில்லா தங்கும் விடுதி வசதிகள் உள்ளன. முதலில்வருபவர்களுக்கே முன் னுரிமை வழங்கப்படும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப் பம் நேரிலோ அல்லது அஞ்சல் வழியா கவோ இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலு டன் இணைத்து இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மய்யத் தொழில் நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 என்ற முகவரிக்கு வரும் 30ஆ-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 

விண்ணப்பத்தில் வாட்ஸ்அப் எண் குறிப்பிட வேண்டும். மேலும் தகவலுக்கு 044-22542992 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *