தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி நீலமேகம் அவர்களுடன்
கழகப் பொறுப்பாளர்கள் சந்திப்பு
தஞ்சாவூர், மே17- தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினருமான டி.கே.ஜி நீலமேகம் அவர்களை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தஞ்சை மாநகர இணைச் செயலாளர் இரா. வீரக்குமார் ஆகியோர் சந்தித்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனை 17ஆவது பாகம் நூலினை அளித்தனர். 91 வயதிலும் 19 வயது இளைஞரை போல் செயலாற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உழைப்பிற்கு பெருமை சேர்க்கும் வகையில் உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலை சந்தாக்களை பெரும் அளவில் திரட்டிட ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தார் நன்றி கூறி விடைபெற்றனர் கழகப் பொறுப்பாளர்கள் . உடன் தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஆர்.கே நீலகண்டன்.