கீழ்க்குறிச்சி, மே 16- பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறு வனத்தில் பயின்று; திரா விட மாணவர் கழகத்தில் மாவட்ட பொறுப்பு வகித்து; இன்றளவும் சீரிய பகுத்தறிவாளராக வும், பெரியாரிய கொள் கையாளராகவும் திகழும், த.நா.தொ.பள்ளி ஆசிரி யர் மன்றத்தின் இப்பகுதி பொறுப்பாளரும், கொத்தட்டை ஊ.ஒ.ந. பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியருமான தோழர் குமார் அவர்களின் தந் தையார், “பெரியார் பெருந்தொண்டர்” கே.என்.கே. கலியமூர்த்தி (வயது 83) உடல்நலக் குறைவின் காரணமாக 14-.05-.2024 அன்று காலை 9.45-மணியளவில் கீழக்குறிச்சி கிராமத்தில் உள்ள அவரது இல்லத் தில் மறைவுற்றார் என்ற செய்தியை அறிவிக்க வருந்துகிறோம்!
கீழக்குறிச்சியில் 2000-ஆம் ஆண்டுகளிலேயே பெரியார் சிலை அமைத் திட அரும்பாடு பட்ட தோடு; அதன் திறப்பு விழாவிற்கு ஆசிரியர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை வரவழைத்து ஊரே திரண்டு ஒன்று கூடி வரவேற்று, மிகப் பெரிய கிராமப்புற மாநாடு போல் பெரியார் சிலை திறப்பு விழாவினை நடத்தி; திராவிட இயக்க வரலாற்றில் இவ்வூர் இன்று முதல் நன்றியூர் என்று பெருமை சேர்க் கும் என பாராட்டி சிறப் பிக்கப்பட்ட பெருமைக் குரியவர் கலியமூர்த்தி அவர்களாவர்.
கடந்த ஆண்டு அவ ரது இல்லத்தில் நடை பெற்ற அவரது வாழ்வி ணையரின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வினை பகுத்தறிவுசுயமரியாதை கொள்கை வழியில் நடத் திய வர்.
சுயமரியாதைச் சுட ரொளி யாகிவிட்ட பெரியார் பெருந்தொண் டர் கீழக்குறிச்சி பெரு நிலக்கிழார் கே.என்.கே.கலியமூர்த்தி அவர்களின் அளப்பரிய தொண்டிற்கு மரியாதை செலுத்திடும் விதமாக அனைத்து கட் சியினரும் பங்கேற்ற இரங்கல் கூட்டம் 15-.05.-2024 அன்று காலை 10-மணிக்கு கீழக்குறிச்சி அவரது இல்லத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, காலை 11 -மணியளவில் இறுதி ஊர்வலம் நடைபெற் றது.