தேர்தலுக்குப் பிறகும் ஆந்திராவில் வெடிக்கும் வன்முறை 144 தடை உத்தரவு அமல்

viduthalai
4 Min Read

அமராவதி, மே16- ஆந்திராவில் அரசு எதிர்ப்பு பேரணி மீது கல்வீசியதால் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் தேர்தலுக்கு பிறகும் வன்முறை தொடருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. எனவே மாநிலத்தின் பல இடங்களில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவு இதுதொடர்பாக விளக்கம் அளிக்க தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநருக்கு தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் கடந்த 13-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
ஆந்திர மாநிலத்தில்உள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும். 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்ததேர்தலில் ஆளும் கட் சியான ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தனித்தே களம் இறங்கியது. தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணியில் ஜனசேனா, பாஜனதா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அது போல் காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூ னிஸ்டுடன் கூட்டணி அமைத்து சந்தித் தது. மும்முனை போட்டி நிலவினாலும், ஒய்.எஸ்ஆர்.காங்கிரஸ்-தெலுங்குதேசம் இடையேதான் கடும் போட்டி நிலுவியது.

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்
தெலுங்கு தேசம் மோதல்

தேர்தல் பிரச்சாரத்தின் போதே கல்வீச்சு நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி காயம் அடைந்தார். தெலுங்கு தேசம் கட்சியினரின் பிரச்சாரக் கூட் டங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தன.
வாக்குப்பதிவு நடந்த நாளன்றும் பல இடங்களில் ஆளும் கட்சியான ஒய்.எஸ். ஆர்.காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும், தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சில இடங்களில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக இரு கட்சியினரும் ஒருவர்மீது ஒருவர் புகார் செய்தனர்.

தொடரும் வன்முறை

வாக்குப்பதிவு முடிந்த பின்னரும் ஆங்காங்கே மோதல் நடைபெற்றது. நந்தியால் மாவட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தவர் களின் வீடுகளை தெலுங்கு தேசம் கட்சியினர் சேதப்படுத்தியதாக கூறப்படு கிறது. மாதீனப்பாடு என்ற இடத்தில் ஆளும் கட்சி நிர்வாகியான ஆதிரெட்டி என்பவரை தெலுங்கு தேசம் கட்சியினர் இரும்பு கம்பியால் தாக்கியுள் ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தாடேபள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் பல இடங்களில் வன்முறை சம்பவங் களும் நடைபெற்று வருகின்றன.

பதற்றம் – 144 தடை உத்தரவு

இதையொட்டி மாநிலத்தின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பதற்ற நிலை தொடருகிறது.
குறிப்பாக கடப்பா,அனந்தபுரம், கர்னூல், குண்டூர், பல்நாடு. திருப்பதி ஆகிய 6 மாவட்டங்களில் பதற்றம் நீடித்து வருகிறது. பதற்றமான இடங் களில் பாதுகாப்புக்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட் டுள்ளனர்.
கடப்பா மாவட்டம் ஜம்மலமடுகு தொகுதி தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் சுதிர் ரெட்டி, பா.ஜனதா வேட்பா ளர் ஆதிநாராயண ரெட்டி, கடப்பா நாடாளுமன்ற தொகுதி தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் பூபேஷ் ரெட்டி ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது கட்சி அலுவலகங்கள் சொந்த கிராமங்களில் உள்ள அவர் களின் வீடுகளுக்கும் காவல்துறையின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மறியலுக்கு அனுமதி மறுப்பு

நந்தியாலா மாவட்டத்தில் பல பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சுதாகர் ரெட்டியை காவல்துறையினர் கைது செய்தனர். இதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் விஜய்பாஸ்கர் ரெட்டி மறியல் செய்ய முயன்றார். 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களின் வீடுகளை தெலுங்கு தேசம் கட்சியினர் சேதப்படுத்தியதால், அங்கிருந்த ஆண் கள் தப்பி ஓடிவிட்டனர்.
பெண்கள் கோவிலில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியினரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தாக்கக்கூடும் என்பதற்காக முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக நந்தி யாலா மாவட் டத்தில் உள்ள ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப் பினர்கள் 3 பேர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் தேர்தல் வன்முறை சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருவதாகவும், தோல்வி பயத்தில் தங்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்று ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி யும், தெலுங்கு தேசம் கட்சியும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

தலைமைச் செயலாளருக்கு தாக்கீது

இதனிடையே ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறை நிகழ்வுகள் குறித்து கவலை தெரிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், இது தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்குமாறு மாநில தலைமைச் செயலாளர் ஜவஹர் ரெட்டி மற்றும் காவல்துறை டி.ஜி.பி.ஹரீஷ் குமார் குப்தா ஆகியோருக்கு தாக்கீது அனுப்பியுள்ளது.
மாநிலத்தில் வன்முறை நிகழ்வுகளை ஒடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று (16.5.2024) விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்களுக்கு தேர்தல் ஆணை யம் உத்தர விட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *