அஞ்சல் நிலைய வங்கியில் 54 பணியிடங்கள்

1 Min Read

அஞ்சல் நிலைய வங்கியில் (அய்.பி.பி.பி.,) ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எக்சிகியூட்டிவ் (அய்.டி., ) பிரிவில் அசோசியேட் கன்சல்டன்ட் 28, கன்சல்டன்ட் 21, சீனியர் கன்சல்டன்ட் 5 என மொத்தம் 54 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்., (கம்ப்யூட்டர் / அய்.டி.,) அல்லது எம்.சி.ஏ., அல்லது பி.எஸ்சி., (கம்ப்யூட்டர்)/பி.சி.ஏ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.4.2024 அடிப்படையில் அசோசியேட் கன்சல்டன்ட் 22 – 30, கன்சல்டன்ட் 22 – 40, சீனியர் கன்சல்டன்ட் 22 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு. தேவைப்பட்டால் இணைய வழி தேர்வு / குழு விவாதம் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 750. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 150

கடைசி நாள்: 24.5.2024

விவரங்களுக்கு: ippbonline.com

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *