15 மாவட்டங்களில் 18ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

viduthalai
1 Min Read

சென்னை, மே 15- தமிழ்நாட்டில் இயல்பை ஒட்டிய வெப்பநிலை நீடிப்பதால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அத்துடன் குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 18ஆம் தேதி வரையில் 8 முதல் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில்

ஓரிரு இடங்களில் நேற்று கனமழையும் பெய்தது.

இதற்கிடையே, வங்கக் கடலில் தென் கிழக்கு பகுதியிலும் குமரிக்கடல் மற்றும் தென் மேற்கு அரபிக் கடல் பகுதியிலும் உருவாகியுள்ள வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களில் தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக ஜூன் மாதம் கேரளப் பகுதியில் தொடங்க வேண்டிய தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்குவதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டால் தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியில் உள்ள மாவட்டங்களில் மழை பெய்து குளிர்ந்த நிலை தமிழ்நாட்டில் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *