பீகாரில் கார்கேயின் ஹெலிகாப்டரில் சோதனை காங்கிரஸ் புகார்

1 Min Read

புதுடில்லி, மே 14- எதிர்க் கட்சி தலைவர்களின் ஹெலிகாப்டர்கள், வாகனங்களை அதிகா ரிகள் குறிவைக்கின்றனர் என்றும் பாஜ தலைவர் களின் வாகனங்களில் அதுபோல் சோதனைகள் செய்யப்படுமா என்று காங்கிரஸ் கேள்வி எழுப் பியுள்ளது.

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பீகாரில் உள்ள சமஸ்திப்பூர், முசாபர்பூர் தொகுதிகளில் 11.5.2024 அன்று பிரச்சாரம் செய் தார்.
சமஸ்திப்பூரில் கார்கே பயணம் செய்த ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித் துள்ளது.

இதுகுறித்து பீகார் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜேஷ் ரத்தோர் தனது டிவிட் டர் பதிவில், கேரளாவில் ராகுல் காந்தி பயணம் செய்த ஹெலிகாப்டரில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

தற்போது கார்கே வந்த ஹெலிகாப்டரையும் இதே போன்று சோதனை செய்துள்ளனர். காவல் துறையினர் வெளியே பாதுகாப்புக்கு நின்று கொண்டிருக்க, பீகார் தலைமை தேர்தல் அதி காரி கண்காணிப்பில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதே போன்று இந் தியா கூட்டணி வேட்பா ளர்களின் ஹெலிகாப் டர்கள், வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின் றன.
ஆளும் கட்சியினர் வாகனங்கள் சுதந்திரமாக இயங்க அனுமதி அளிக் கின்றனர் என்று குறிப் பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *