கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

11.5.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* உபியில் இந்தியா கூட்டணி புயல் வீசுகிறது மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்: ராகுல்காந்தி உறுதி
* மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் பிரிஜ் பூஷன் மீது குற்றச்சாட்டு பதிவு: டில்லி நீதிமன்றம் உத்தரவு
* மூன்று கட்ட தேர்தலுக்குப் பின்னர் பாஜக ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது, மல்லிகார்ஜூனா கார்கே.
* அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பையும் மீறி கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
* தெலங்கானா காங்கிரஸ் அரசின் பெண்கள் நலத் திட்டங்கள், நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தேர்தலில் எதிரொலிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர் வணிக வெற்றியாளர்கள் திட்டத்தின் கீழ், கடந்த ஓராண்டில் 1300 தாழ்த்தப்பட்டோர் புத்தொழில் தொடங்கியுள்ளனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘சர்வாதிகாரத்துக்கு எதிராக 140 கோடி மக்கள் ஒன்றுபட வேண்டும்’: சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் முதல் கருத்து
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எழுதி வைத்துக்கொள்ளுங்கள், ஜூன் 4 அன்று மோடி இந்தியாவின் பிரதமராக இருக்க மாட்டார். இனிமேல் மோடி இந்தியாவின் பிரதமராக போவதில்லை என்பதற்கு எழுத்துப்பூர்வ உத்தரவாதமாக என்னிடம் இருந்து நீங்கள் எடுத்துக்கொள்ளலாம், உ.பி. தேர்தல் பரப்புரையில் ராகுல் அதிரடிப் பேச்சு.
தி இந்து:
* அதானி-அம்பானி எதிர்க்கட்சிகளுக்கு லஞ்சம் கொடுத்ததால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மவுனம் சாதித்து விட்டார் என்று குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, அதானி, அம்பானி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என காங்கிரஸ் கேள்வி.
தி டெலிகிராப்:
* பிரதமர் மோடியுடன் விவாதத்திற்கு நான் 100 சதவீதம் தயாராக இருக்கிறேன், ஆனால் அவர் வரமாட்டார் என ராகுல் காந்தி பேச்சு.
* வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து, குறைந்த வாக்குப்பதிவு அறிக்கைகள் வந்ததிலிருந்து, பதற்றமடைந்த மோடி, வளர்ச்சி மற்றும் “400-க்கும் மேற்பட்ட இடங்கள்” பற்றிய பேச்சிலிருந்து தனது கவனத்தை வெட்கக்கேடான மத துருவமுனைக்கு மாற்றியுள்ளார் என்கிறார் கட்டுரை யாளர் ஜே.பி.யாதவ்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பயணிகள் மற்றும் சக ஊழியர்களுடன் சிறப்பாகத் தொடர்பு கொள்வதை உறுதி செய்யும் வகையில், பிற மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு, தெற்கு ரயில்வே பேச்சுத் தமிழ் கற்பிக்கத் தொடங்கும்.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *