பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் விடுதலை சந்தா சேர்ப்பு தீர்மானக் கூட்டம்

1 Min Read

பெரம்பலூர், மே 7- பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழ கம் சார்பில் விடுதலை சந்தா சேர்ப்பு கலந்துரை யாடல் மற்றும் தீர்மான கூட்டம் மருத்துவர் குண கோமதி மருத்துவமனை இல்லத்தில் மாவட்ட தலைவர் சி.தங்கராசு தலைமையில் மாவட்ட ப.க தலைவர் பெ.நட ராசன், நகரத் தலைவர் அக்ரி ஆறுமுகம் முன்னி லையில் 6.5.2024 அன்று மாலை 5.30 மணிக்கு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில தொழிலாளர் அணிச்செயலாளர் மு.சேகர் விடுதலையின் செயல்பாடு, ஆசிரியர் அவர்களின் ஆயுள் நீட் டிப்பிற்கு விடுதலை சந் தாவின் தேவையை விளக் கிப்பேசினார்.

சந்தா விவரங்கள்
பெ.நடராசன் ப.க தலைவர் 10 சந்தா, சர்புதீன் அமைப்பாளர் வ.களத்தூர் 5 சந்தா, ஆறுமுகம் நகர தலைவர் 5 சந்தா, சின்னசாமி 5 சந்தா, மு.ராமு 5 சந்தா, அரங்க ராசன் 5 சந்தா, சீத்தாபதி 5 சந்தா, வேலாயுதம் 5 சந்தா, மு.விசயேந்திரன் 5 சந்தா என மொத்தம் 50 சந்தாவினை 20.5.2024 க்குள் திரட்டித் தர உறுதி ஏற்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டதை அனை வரும் முகமலர்ச்சியோடு ஏற்றுக் கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *