தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுறுத்தலின்படி சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் 2.5.2024 மாலை 6 மணியளவில் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மற்றும் குடிஅரசு நூற்றாண்டு தொடக்கவிழா சிறப்புப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட திராவிடர் கழக தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமை வகிக்க சீர்காழி ஒன்றியத் தலைவர் ச. சந்திரசேகரன் சீர்காழி ஒன்றிய செயலாளர் சா.செல்வம் சீர்காழி பகுத்தறிவாளர் கழக தலைவர் கோ.சட்டநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் அனைவரை யும் வரவேற்று நிகழ்வின் நோக்கத்தை விளக்கினார். மாவட்ட அமைப்பாளர் ஞான. வள்ளுவன் நிகழ்வை தொடங்கி வைக்க தலைமைக் கழக பேச்சாளர் யாழ். திலீபன் சிறப்புரையாற்றினார்.
குத்தாலம் நகர திராவிடர் கழக தலைவர் சா.ஜெக தீசன், மயிலாடுதுறை நகர தலைவர் சீனி.முத்து, மயிலாடுதுறை நகர செயலாளர் பூ.சி.காமராஜ், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் அ. சாமிதுரை, கொள்ளிடம் ஒன்றியத் தலைவர் பி. பாண்டியன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் பூ. பாண்டுரங்கன், வைத்தீசுவரன்கோயில் நகர தலைவர் வி.ஆர்.முத்தையன், சீர்காழி பகுத்தறிவாளர் கழக அமைப்பா ளர் செம்மலர் வீரசேனன், ஆசிரியர் சம்பந்தம் மாவட்ட மகளிர்அணி செயலாளர் ச.தமிழ்மணி மயிலாடுதுறை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தங்க. செல்வராஜ் கடவாசல் ஆனந்தன் தந்தை பெரியார் திராவிடர் கழக மண்டல அமைப் பாளர் பெரியார் செல்வம், மாவட்டத் தலைவர் இரா. பரசுராமன் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன், மாவட்ட செயலாளர் கி. தளபதிராஜ், மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், சீர்காழி பகுத்தறிவாளர் கழக செயலாளர் கவிஞர் வெண்மணி, மற்றும் சிறப்புரை ஆற்றிய யாழ்.திலீபன் ஆகியோர் தமிழக வரலாறு தொடங்கி ஆரிய ஆதிக்கத்தின் உச்சம் கடந்து தமிழர் தம் வாழ்வு பறிபோனதுவரை விளக்கி அக்கால கட்டத்தில் தமிழர்கள் சம வாய்ப்பும் சமூக நீதியும் பெற்று மூடநம்பிக்கையற்ற மானமும் அறிவும் கொண்ட சமுதாயமாக வாழ்வதற்காக பாடுபடும் இயக்கமாகத் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப் பட்டதே சுயமரியாதை இயக்கம் என்றும் அதன் போர்வாளாகத் திகழ்ந்ததுதான் குடிஅரசு இதழ் என்றும் அதன் தொடர்ச்சியாக இன்றுவரை நிலைத்து நின்று உலக வரலாற்றில் அறுபது ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை ஆசிரியராகக் கொண்டு விளங்கும் விடுதலை ஏடு என்றும் குறிப் பிட்டனர்.
அவர்தம் வழிகாட்டலில் வெற்றிநடை போடும் திராவிட மாடல் அரசு காலத்திற்கும் நின்று நிலைத் துத் தமிழர் வாழ்வில் வளம் சேர்க்க முன்னோடியாகத் திகழ்ந்தது சுயமரியாதை இயக்கமும் குடிஅரசும்தான் என்று பல்வேறு சான்றுகளுடன் எடுத்துரைத்து அதனை அனைவரும் நன்றியோடு நினைவுகூறவே இந்நூற்றாண்டு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ் நாடு முழுவதும் எடுக்கப்படுகிறது என்று குறிப்பிட் டது அனைவரையும் கவர்ந்தது.இறுதியாக மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணிச் செயலாளர் ச.தமிழ்மணி நன்றி கூறினார்.
பாளையங்கோட்டை
4.5.2024 அன்று மாலை 6.30 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டை லூர்துநாதன் சிலையருகில் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாத இயக்க நூற்றாண்டு விழா, குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு விழா பரப்பரை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட கழகத்தலைவர் ச.இராசேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட திராவிடர் கழக செயலாளர் இரா. வேல்முருகன் வரவேற்று உரையாற் றினார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்க உரையாற் றினார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு திராவிடர் கழக சொற்பொழிவாளர் இராம .அன்பழகன் -அறி வுலகப் பேராசான் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் தொண்டினையும், அதனால் விளைந்த பயன்களையும், குடிஅரசு ஏட்டில் வெளிவந்த அய்யாவின் அறிக்கை களை பேச்சுக்களை எடுத்துக்க்காட்டியும், தந்தை பெரியாருக்கு பிறகு அன்னை மணியம்மையாருக்குப் பிறகு தமிழர் தலைவர் ஆசிரியர் ஆற்றி வரும் அளப் பரிய தொண்டினை விளக்கியும் ஒரு மணி நேரம் சிறப்பாக நகைச்சுவையோடு கருத்துரை ஆற்றினார்.
.இந்நிகழ்வில் மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற ஆய்வுக் குழு உறுப்பினர் சுப .நயினார் சேரன் மகாதேவி ஒன்றிய தலைவர் கோ. செல்வ சந்திரசேகர், வீரவநல்லூர் கழகத் தலைவர் மா.கருணாநிதி, மாநகர பகுத்தறிவாளர் கழகத்தலைவர் முரசொலி முருகன், மாநகர பகுத்தறிவாளர்கழக துணைத் தலைவர் சந்திப்பு நடராசன், மாநகர பகுத்தறிவாளர்கழக துணைச் செயலாளர் எம். ஜி. ஏ .ஜார்ஜ், தச்சை பகுதி கழக செயலாளர் செ.மாரி கணேஷ், மாவட்ட மாணவர் கழக செயலாளர் செ.சூர்யா மாவட்ட ப.க. துணைச் செயலாளர் க.முருகேசன் மாவட்ட ப.க. செயற்குழு உறுப்பினர் கனகதாமஸ், நெல்லைப் பகுதி செயலாளர் நா.மகேஷ், மூலக்கரைப்பட்டி குமார், அய்யாதுரை, தென்காசி மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் சீ.செங்கதிர் வள்ளுவன், உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள். கழக சொற் பொழிவாளர் இராம அன்பழகன் உரை கேட்டு மகிழ்ந்த திமுக தொழிற்சங்க தலைவர் சு. இனியன் மற்றும் நண்பர்கள் பயனாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்கள்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டியில் கழகத்தின் சார்பில் சுயம ரியாதை இயக்க நூற்றாண்டு ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழா… 3.5.2024 மாலை 6:00 மணிக்கு திருத்துறைப் பூண்டி சீனிவாசராவ் மணிமண்டபம் அருகில் பரப் புரைக்கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் சு.சித்தார்த்தன் தலைமை ஏற்று உரையாற்றினார். தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் வீ.மோகன், பொதுக்குழு உறுப்பினர் தி.குணசேகரன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. திருவாரூர் நகர செயலாளர் க.சிவராமன், மாவட்ட துணை தலைவர் கி.அருண் காந்தி, மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ், கழக காப்பாளர் கி.முருகையன், தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் உரைக்குபின் கழக சொற்பொழிவாளர் தேவ.நர்மதா, கழக சொற்பொழிவாளர் வழக்குரைஞர் சு.சிங்கார வேலர் உரையாற்றினார். நிகழ்வில் மாவட்ட மாண வர் கழகத் தலைவர் கே.அழகேசன், கீவளுர் ஒன்றிய தலைவர் ரெங்கநாதன், சீரவட்டம் கிருஷ்ணன், மாராச்சேரி சு.சுரேஷ், பன்னத்தெரு செல்லப்பன், நகரச் செயலாளர் ப.நாகராஜன் வரவேற்புரை ஆற்றினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் அஜெ.உமாநாத் நன்றி கூறினார்.
தாராபுரம்
தாராபுரம் கழக மாவட்டத்தில் கழகத்தின் சார் பில் 4.5.2024 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தாராபுரம் கழகத் தோழர்கள் பங்ககேற்றனர்.
பொன்னேரி
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா குடிஅரசு நூற்றாண்டு விழா 04/05/2024 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் பொன்னேரி நகரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தலைமை ஏற்றவர் பொன்னேரி நகர தலைவர் வே.அருள். வரவேற்புரை ஆற்றியவர் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் கெ.முருகன். முன்னிலை பொறுப்பு வகித்தவர்கள் இரா.விஜயகுமார் பொதுக் குழு உறுப்பினர், காசு ராஜசேகர் மாவட்ட துணைத் தலைவர், கு.செல்வி மாவட்ட திராவிடர் மகளிர் பாசறை தலைவர், மா.இளையராணி மாவட்ட திரா விடர் மகளிர் பாசறை செயலாளர் செ. உதயகுமார் மேனாள் மாவட்ட தலைவர், இரா.அசோக் குமார் மாவட்ட தொழிலாளர் அணி தலைவர், மு.க.தமிழ்ச்செல்வன் மீஞ்சூர் ஒன்றிய தலைவர், ச.நதியா திராவிடர் கழக மகளிர் அணி மாவட்ட செயலாளர், எ.டார்வி மாவட்ட தலைவர் பகுத்தறிவாளர் கழகம், செல்வி திராவிடர் கழக மகளிர் அணி, சிறப்பு அழைப்பாளர்களாக பொன் னேரி நகர திராவிட முன்னேற்றக் கழக பொன்னேரி நகரக் கழகச் செயலாளர் ரவிக்குமார், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு, உறுப்பினர் பொன்னேரி நகர் மன்ற தலைவர், மருத்துவர் பரிமளம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி நகர செயலாளர் மு.சுதாகர், கும் மிடிப்பூண்டி கழக மாவட்ட தலைவர் புழல் தா.ஆனந்தன் ஆகியோர் உரையாற்றினார்.
சிறப்புரையாக திராவிடர் கழகத்தின் மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் சோ சுரேஷ். தலைமை கழக அமைப்பாளர் வி. பன்னீர்செல்வம் ஆகியோர் உரைக்குப்பின், திராவிடர் கழகத்தின் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி சிறப்புரையாற்றினார்.இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
மாவட்டச் செயலாளர் ஜெ. பாஸ்கர் மாவட்ட இளைஞரணி தலைவர் ப. சக்கரவர்த்தி, கழக மகளிர் அணி மாவட்ட தலைவர் மு.இராணி, முன்னாள் மாவட்ட செயலாளர் இரா. ரமேசு. விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கே. மூர்த்தி. புழல் ஒன்றிய தலைவர் வடகரை விஜயகுமார் புழல் ஒன்றிய செயலாளர் வடகரை உதயகுமார் சோழவரம் ஒன்றிய செயலாளர் சண்முகம் பொன்னேரி நகர இளைஞரணி தலைவர் மல்லிகார்ஜுன் பொன்னேரி நகர இளைஞரணி செயலாளர் சுகன்ராஜ் பொன்னேரி நகர திராவிடர் கழக மகளிர் அணி பொறுப்பாளர் சு. துர்கா. வஞ்சிவாக்கம் சு. பாலாஜி, வெள்ளக்குளம் சு.எழில், புது வாயல் இரணியன், பொன்னேரி செல்வராஜ், பொன் னேரி ஹேமந்த் குமார், மகளிர் அணியை சார்ந்த மு.மாரியம்மாள், எ.மீரா கதீஜா, மு.பவதாரணி மற்றும் பெரியார் பிஞ்சுகள் செ.வி.நவிலன் வெண்பா, சு.இ.தமிழ் செம்மல் ம.பாவேந்தர், ம.திராவிட தென்றல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்தின் நிறைவாக நன்றி உரையை பொன்னேரி நகர தலைவர் வே.அருள் வழங்கினார். மற்றும் பல்வேறு இயக்கத்தைச் சார்ந்த தோழர்களும் நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். மிகவும் சிறப்பான ஒரு வரலாற்று நிகழ்வுகளை நம் கழகத்தின் பிரச்சார செயலாளர் அருள்மொழி சிறப்புடன் எடுத்துரைத்தார்.
ஈரோடு
4.52024 சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 7.00 மணி வரை கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகிலும், 7.15 முதல் 8.30 வரை வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகிலும் “சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவரது உரையில், தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழின் ஒப்பற்ற பணிகளையும் அதனால் தமிழ்ச் சமூகம் பெற்ற பயன்களையும் விளக்கிப் பேசினார். கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மா. மணிமாறன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தலைமைக் கழக அமைப்பாளர் த. சண்முகம், கோபி .வெ.குமாரராஜா, தி.மு.க மகளிரணி அமைப்பாளர் கனிமொழி நடராசன், மாவட்டத் தலைவர் இரா. நற்குணன், பொதுக்குழு உறுப்பினர் கோ.பாலகிருட்டிணன், பவானி அசோக்குமார், ப.சத்தியமூர்த்தி, கி. பிரபு, ஜெயச்சந்திரன், தங்கராஜ், தாணடாம்பாளையம் அன்பரசு, பெரியார் பிஞ்சு சோபிகா, குறளோவியா, ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள். இறுதியாக மாநகர செயலாளர் தே.காமராஜ் நன்றி கூற கூட்டம் முடிந்தது.
சிவகங்கை
4.5.2024 மாலை 6.00 மணி அளவில் சிவகங்கை மாவட்ட கழகம் சார்பில் சுய மரியாதை இயக்கம் நூற்றாண்டு, குடி அரசு நூற்றாண்டு ஆகிய இரு பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட கழக தலைவர் இரா.புகழேந்தி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பெரு.இராசாராம் வரவேற்புரை ஆற்றினார்.
தொடக்க உரை சிவகங்கை மாவட்ட கழக காப்பாளர் வழக் கறிஞர்.ச.இன்பலாதன் உரையாற் றினார். சிவகங்கை மாவட்ட கழக அமைப்பாளர் ச.அனந்தவேல், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலர் சொக்கநாதபுரம் கவிஞர் கணேசன் ஆகி யோர் உரையாற்றிய பிறகு, சிறப்பு அழைப்பாளர்களாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமைக் கழக சொற்பொழிவாளர் தமிழ்ப் பிரியா, வேங்கை பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினார்கள். கழக சொற்பொழிவாளர் மாங்காடு சுப.மணியரசன் சிறப்புரையாற்றினார். பெரியார் பெருந்தொண்டர் க. வீ.வேம்பத்தூர் செயராமன் நன்றி கூறினார்.
கடலூர்
கடலூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா குடிஅரசு நூற்றாண்டு விழா 4.5.2024 சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது.
கூட்டத்திற்கு கடலூர் மாநகர தலைவர் தென் சிவகுமார் தலைமையேற்றார். மாநகர செயலாளர் இரா.சின்னதுரை அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி, செயலாளர் க.எழிலேந்தி, இணை செயலாளர் நா.பஞ்சமூர்த்தி, கழக பேச்சாளர் புலவர் சு.இராவணன், மாநில பகுத்தறிவு கழக அமைப்பாளர் இரா.பெரியார் செல்வம், மாவட்ட இளைஞரணி தலைவர் நா.உதய சங்கர், இளைஞர் அணி அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வி.அருணாச்சலம் ஆகியோர் முன்னிலை ஏற்றனர். பொதுக்குழு உறுப்பினர் நா.தாமோதரன் தொடக்க உரையாற்றினார். வழக்குரைஞர் பூவை புலிகேசி சிறப்புரையாற்றினார்.
கடலூர் தர்மன், தமிழரசன், சுதாகர், கோ.கிருஷ்ணமூர்த்தி, வடக்குத்து தங்க பாஸ்கர், குறிஞ்சிப்பாடி சுமலதா, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சி.தர்மலிங்கம், ராஜ்குமார், ராம லிங்கம், சன்மார்க்க சங்க பொறுப்பாளர் ராஜதுரை, முத்தமிழ் சங்கத் தலைவர் பழ.ஆறுமுகம், ராசு, கவிஞர் விடுதலை அன்பன், சிவா, ஆனந்த், வழக்கு ரைஞர் வனராசு, மாவட்ட தமிழ் சங்கத்தின் பொறுப் பாளர் நா.ரவி, சிவகுமார் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் நூலகர் மாதவன் நன்றி கூறினார்.