ஈழத்தமிழர் போராட்ட வீரரும், இறுதி மூச்சு அடங்கும் வரை ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவருமான தோழர் ஈழவேந்தன் (வயது 91) கனடாவில் நேற்று (29.4.2024) மறை வுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
தமிழ்நாட்டில் அவர் இருந்த போது ஈழத் தமி ழர்கள் தொடர்பான கூட்டங்களிலும், மாநாடுகளிலும் கலந்து கொண்டவர்.
பெரியார் திடலில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டவர்.
அவரது மறைவால் வருந்தும் அவரது குடும்பத் தினருக்கும், ஈழத் தமிழர்களுக்கும் திராவிடர் கழகத் தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
30.4.2024