சைதை தொகுதியில் இளைஞர்கள், மாணவ, மாணவியருக்கு “கட்டணமில்லா ஆங்கில பேச்சுப்பயிற்சி வகுப்பு”

Viduthalai
1 Min Read

சென்னை,ஏப்.30- சைதை பகுதி யில் இளைஞர்கள், இளம்பெண்க ளின் திறனை ஊக்குவித்து மேம் படுத்தும் நோக்கத்தில் கலைஞர் கணினி கல்வியகம் தொடங்கப் பட்டு, கடந்த 4 ஆண்டுகளில் 800க்கும் மேற்பட்ட இளைஞர்க ளுக்கு டேலி, எம்.எஸ். ஆபீஸ் உள்ளிட்ட கணினி பயிற்சி, வேலை வாய்ப்பு திறன் பயிற்சிகள் வழங்கப் பட்டு, அவர்களில் பெரும்பாலோர் உயர்நிறுவனங்களில் பணியாற்று கின்ற வாய்ப்புகளைப் பெற்றனர். கலைஞர் கல்வியகம் சார்பில் இளைஞர்கள், இளம் பெண்கள், மாணவர்கள் பயன்பெறும் வகை யில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி வகுப் புகள் இன்று தொடங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சைதை தொகுதியை சார்ந்த மாணவ, மாணவியர்,இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயனுறும் வகையில் இன்று (30.4.2024) மாலை 5 மணிக்கு கலைஞர் கணினி கல்வியக வளாகத்தில் “கட்டண மில்லா ஆங்கில பேச்சுப்பயிற்சி வகுப்புகள்” தொடக்க விழா நடை பெற உள்ளது. அமைச்சர் மா.சுப் பிரமணியன் தொடங்கி வைக்கி றார்.
பதிவுக்கு: 8939330671, 9500188691 தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *