ஒன்றிய பி.ஜே.பி. அரசுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர் மறியல் போராட்டம் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிவிப்பு

Viduthalai
2 Min Read

அரசியல்

சென்னை,செப்.12- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு:

கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் உள்ள மோடி தலைமையிலான அரசு மக்கள் விரோத கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதனால் பெரும் பகுதி மக்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.

திட்டக் குழு கலைப்பு, காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு நிலை ரத்து, ‘நீட்’ தேர்வு மூலம் மருத்துவக் கல்வி மறுப்பு, மாநிலங்களின் அதிகாரங்களை பறித்து மத்தியில் குவித்தல், ஒரே நாடு, ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் என்ற பெயரில் கூட்டாட்சி கோட்பாடு களை தகர்த்து வருகின்றது.

பெரும் பன்னாட்டு குழும நிறுவனங்களின் லாப வேட்டைக்கு பொதுத்துறை நிறுவனங்களையும், இயற்கை வளங்களையும் பலி யிட்டு வருகிறது. கருத்து தெரி விக்கும் உரிமைகளை மறுத்து, ஏதேச்சதிகார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

வரலாறு காணாத வேலையின்மை, கட்டறுந்து உயர்ந்து வரும் விலைவாசி, வேலை நீக்கம், விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை மறுப்பு, விவசாய நிலங்களை பறித்து குழும பண்ணைகள் அமைக்கும் முயற்சி என நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட் டுக்கும் குந்தகம் ஏற்படுத்தும் செயலில் மோடி ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. 

தமிழ்நாடு உட்பட எதிர்கட்சி கள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மாளிகை வழியாக போட்டி அரசு நடத்தி வருவதை இனியும் அனு மதிக்க இயலாது என்ற மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் முறை யில் “மோடி அரசே வெளியேறு” என்ற முழக்கத்தை முன்வைத்து இன்று (12.9.2023) முதல் தமிழ்நாடு முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் மறியல் போராட் டத்தில் ஈடுபடுகிறது.

செப்டம்பர் 12, 13, 14 தேதிகளில் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மய்யங்களில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் பல்லாயிரம் ஆண்களும், பெண்களும் பங்கேற்பார்கள்.

தலைநகர் சென்னையில் வட சென்னை, பீச் ரயில் நிலையம் அருகில் உள்ள அஞ்சலகம் முன்பு நடைபெறும் மறியல் போராட்டத் தில் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலா ளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

மாநில உரிமைகள், மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மய் யங்களில் நடைபெறும் தொடர் மறியல் போராட்டத்தை  தொழி லாளர்கள், விவசாயிகள், விவசா யத் தொழிலாளர்கள், மாணவர், இளைஞர்கள், பெண்கள், ஜன நாயக சக்திகள் அனைவரும் ஆத ரித்து பங்கேற்குமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது.

-இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *