பெண்ணாடம் மேனாள் நகரத் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி சாமிநாதன் அவர்களுடைய துணைவியார் நல்லம்மாள் அவர்களின் படத்திறப்பு நிகழ்வு இன்று (27.4.2024) காலை 10 மணி அளவில் அவருடைய இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு தலைமை தங்கராசமாணிக்கம், முன்னிலை பெண்ணாடம் நகர செயலாளர் பச்சமுத்து, கலைச்செல்வி, ரங்கநாதன், வரவேற்புரை பாரிவேந்தன், சின்னதுரை (காவல்துறை அதிகாரி), மீனா, பச்சமுத்து, நாகராசு மற்றும் அவரது உறவினர் நினைவேந்தல் உரை ஆற்றினர். நிகழ்வின் நிறைவுரையாக, திட்டக்குடி நகர கழக தலைவர் தோழர் அறிவு நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்.