நாட்டை வேலையில்லாத் திண்டாட்டத்தின் மய்யமாக மோடி மாற்றிவிட்டார்! பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்தி!

1 Min Read

பகல்­பூர், ஏப்.23 – நாடா­ளு­மன்ற தேர்­த­லில் பா.ஜன­தா­வுக்கு 150 இடங்­கள் கிடைக்­காது எனராகுல் காந்தி கூறி­யுள்­ளார்.
நாடா­ளு­மன்றதேர்­த­லில் போட்­டி­யி­டும் காங்­கி­ரஸ் மற்­றும் இந்­தியா கூட்­டணி வேட்­பா­ளர்­களை ஆத­ரித்துகாங்­கி­ரஸ் மூத்த தலை­வர் ராகுல் காந்தி தீவிர பிரச்­சா­ரம் மேற்­கொண்டு வருகிறார். அந்த வகை­யில் பீகா­ரின் பகல்­பூ­ரில் 21.4.2024 அன்று நடந்த பிரச்­சார கூட்­டத்­தில் அவர் உரை­யாற்­றி­னார். அப்­போது பா.ஜனதா மற்­றும் தேசிய ஜன­நா­யக கூட்­ட­ணியை கடுமையாக விமர்­சித்­தார்.

தனது உரை­யில் அவர் கூறி­ய­தா­வது:
இந்­திய அர­சி­யல் சாச­னத்­தை­யும், ஜன­நா­ய­கத்­தை­யும் பா.ஜ.க. அழிக்க சதி செய்­கி­றது.
பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மற்­றும் ஒரு­சில பெரும் பணக்கா­ரர்­க­ளுக்கு எதி­ராக இந்­தியா கூட்­டணிபல­மாக போரா­டு­கி­றது. பிர­த­மர் மோடி­யின் ஆட்­சி­யில்நாட்­டின்70 சத­வீத மக்­க­ளின் வரு­மா­னம் வெறும் ரூ.100 தான். அதே­நே­ரம் மோடி­யின் 10 ஆண்­டு­கால ஆட்­சி­யில் கார்­ப­ரேட் ஜாம்­ப­வான்­க­ளான அம்­பானி மற்­றும் அதா­னிக்கு முழுப் பண­மும் கொடுக்­கப்­பட்டுள் ­ளது.
மேலும் துறை­மு­கங்­கள், சூரிய மின்­சக்தி, சுரங்­கங்­கள், எரி­சக்தி துறை, பாது­காப்பு உள்­ளிட்ட துறை­கள் அதா­னிக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. தேசத்­தின் நிதியை 10 முதல் 13 முத­லா­ளி­க­ளின் கைக­ளில் ஒப்­ப­டைப்­ப­தற்­காக மக்­க­ளின்கவ­னத்தை புத்­திசா சாலித்­த­ன­மாக திசை­தி­ருப்­பும் வகை­யில், சிறு வணி­கர்­களை மோடி பதற்­றத்­தில் ஆழ்த்­தி­னார்.
நடந்து வரும் நாடா­ளு­மன்ற தேர்­த­லில் பா.ஜனதா 400-க்கு அதி­க­மான இடங்­களை பிடிக்­கும்என அந்த கட்­சி­யி­னர் கூறி வரு­கின்­ற­னர். ஆனால் பா.ஜனதா 150 இடங்­களை பிடிப்­பதே கடி­னம். அதற்கு மேல் நிச்­ச­யம் அவர்­க­ளுக்குகிடைக்­காது.

இந்­தி­யாவை வேலை­யில்லா திண்­டாட்­டத்­தின் மய்ய­மாக மோடி மாற்றி விட்­டார். ஆனால் இந்­தியா கூட்­டணி ஆட்­சி­யில் இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு உறுதி செய்­யப்­ப­டும். பட்­ட­தாரி மற்­றும் டிப்­ளமோ பெற்ற இளை­ஞர்­க­ளுக்கு ரூ.8500 மாதாந்­திர உத­வித்­தொ­கை­யில் 1 ஆண்டு பயிற்­சிக்­கான வாய்ப்பு வழங்­கப்­ப­டும்.
-இவ்­வாறு ராகுல் காந்தி கூறி­னார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *