பகுத்தறிவு விழிப்புணர்வு திண்ணைப் பிரச்சாரம்

1 Min Read

நாகர்கோவில், ஏப். 22- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வுக்கான திண்ணைப் பிரச்சாரம் கடியப் பட்டணம் கிராமத்தில் நடைபெற்றது.
இந்தநிகழ்ச்சிக்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப் பிரமணியம் தலைமை தாங்கினார். கழக மாவட் டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையைத் தொடங்கி வைத்தார். மாவட்ட பகுத்தறிவாளர்கழக தலைவர் உ.சிவதாணு முன்னிலை வகித்தனர்.

இலக்கிய அணி செய லாளர் பா.பொன்னுராசன் மற்றும் கழகத் தோழர் கள் பலரும் பங்கேற்று தந்தை பெரியாருடைய நூல்கள், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுடைய நூல்கள் பெரியா ருடைய கொள்கைகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி திராவிடர்கழகத் தின் கொள்கைகளை தெருத்தெருவாக சென்று பொதுமக்களிடம் எடுத் துக்கூறி பரப்புரையில் ஈடுபட்டனர். இந்த பரப் புரைக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வர வேற்பு இருந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *