உடற்கொடையளிக்கப்பட்ட பெரியார் பெருந்தொண்டர் த.பெரியசாமிக்கு அரசு சார்பில் மரியாதை

viduthalai
1 Min Read

கள்ளக்குறிச்சி, ஏப். 22- கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம் எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த த.பெரியசாமி, வயது முதிர் வின் காரணமாக உயிரிழந்ததை யடுத்து, அவரது உடல் கொடை யாக கொடுத்தமைக்காக, தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, அவரது இறுதி நிகழ்வுகள் அரசு மரியாதை யுடன் மேற்கொள்ளப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் எடுத்தவாய் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எடுத்தவாய்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலை மையாசிரியர் த.பெரியசாமி (வயது 82) த/பெ.தம்பு வயது முதிர்வின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு 20.04.2024 அன்று இரவு 10 மணியளவில் உயிரிழந்தார். இவர் உயிரிழப்பதற்கு முன்பு தனது உடலை கொடையளிப்பதாக பதிவு செய்திருந்தார்.

எனவே, தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுரையின்படி, கள்ளக்குறிச்சி வருவாய் கோட் டாட்சியர் எஸ்.லூர்துசாமி, சின்ன சேலம் வட்டம் எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் உள்ள த.பெரியசாமி யின் வீட்டிற்கு நேரில் சென்று, தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரின் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறு தல் கூறினார். இந்நிகழ்வின்போது, சின்னசேலம் வட்டாட்சியர் கம லக்கண்ணன் மற்றும் அரசு அலு வலர்கள் உடனிருந்தனர்.
கள்ளக்குறிச்சி கழக மாவட்ட அமைப்பாளர் பெரியார் பெருந் தொண்டர் த.பெரியசாமி மறை வுக்கு கழகத்தின் சார்பில் கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *