மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்ததையொட்டி, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (22-4-2024) அவரது இல்லத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சந்தித்து, சால்வை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார். உடன் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் இருந்தனர். இந்தியா கூட்டணிக் கட்சி தமிழ்நாடு தலைவர்களும், முன்னணியினரும் முதலமைச்சரைச் சந்தித்து சால்வை அணிவித்து உரையாடினர்.