தந்தை பெரியார் பிறந்த நாள்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை – ‘சமூகநீதி நாள்’ உறுதிமொழி ஏற்பு!

1 Min Read

அரசியல்

தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை (17.9.2023) முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (15.9.2023) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்பு அவரது தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன், கு.செல்வப்பெருந்தகை, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வளர்ச்சி ஆணையர் / முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர்.நா.முருகானந்தம்,  நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன்,  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன்,  அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *