வாக்காளப் பெருமக்களே! நீங்கள் இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்வது நமது சமுதாய கடமை என்பதை உணர்த்துவதற்காகத் தான் தாய்க் கழகமான திராவிடர் கழகம் தேர்தல் களத்தில் இறங்கி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு 91 வயதிலும் தமிழர் தலைவர் ஆசிரியர் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று வரு கிறார். ஊழலை ஒழிக்கும் உத்தமர் வேடம் போட்டுள்ள பிரதமர் மோடி அமித்ஷா கும்பல் மிகப்பெரிய ஊழல் மன்னர்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்.
கொஞ்சம் கூட அச்சம் இல்லாமல், தவறு செய்கி றோம் என்ற பயம் இல்லாமல் ஊழலை செய்யக்கூடிய கட்சி பாஜக என்பதை நாடே அறியும். நாமும் அறிய வேண்டும். சிஏஜி என்று சொல்லக்கூடிய அரசு சார்ந்த தணிக்கையாளர்கள் கண்டுபிடித்த மோடி அரசின் ஊழல் 7.5 லட்சம் கோடி. சாகர்மாலா திட்டம் தொடங்கி டோல்கேட் வரை அவர்களால் செய்யப்பட்டு இருக்கிற ஊழல் – அதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 7.5 லட்சம் கோடி. இவ்வளவு ஊழலை செய்த மோடி இன்று உத்தமர் வேடம் போட்டு தமிழ்நாட்டில் எந்த முகத்தோடு வாக்கு கேட்டு வருகிறார் என்று தெரியவில்லை.
இது மட்டுமா? பாரதப் பிரதமர் கேர் நிதி அதாவது பிஎம் கேர் நிதி ஊழல், தேர்தல் பத்திர மோசடி ஊழல், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் நடைபெற்ற ஊழல், ஊழல் செய்வதற்காகத்தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தனர்.
ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட வியாபம் ஊழல், இந்திய ராணுவத்திற்கு ராணுவ விமானங்கள் வாங்குவதில் ஊழல்-ரபேல் ஊழல், நிலக்கரி தொலை தொடர்பு துறையில் ஊழல்-முறைகேடான கணக்கு வழக்கு-வெளிப்படைத்தன்மை இல்லாத போக்கு வங்கிகளில் செய்துள்ள முறைகேடு மற்றும் மோடி யோடு அணுக்கமாக இருக்கக்கூடிய, மோடியின் ஆட்சியின் முழுமையான ஆதரவை பெற்று தங்கள் சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கும் அதானி அம்பானி செய்துள்ள ஊழல் பட்டியல் பெரியது. விஜய் மல்லையா ஆயிரக்கணக்கான கோடி ஊழல் செய்துவிட்டு இன்று உல்லாச பொறியில் வளம் பெறுகிறார்.
நீரவ்மோடியும் அப்படித்தான்! அரசின் வங்கிகளில் பணத்தை சுருட்டி விட்டு வெளிநாடுகளில் பாதுகாப் பாக தஞ்சம் அடைந்தவர்களில் முக்கியமானவர். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி ஏப்பம் விட்டு விட்டு, பொய்யாக மொய் எழுதிவிட்டு லண் டன் சென்று குடியுரிமை கோரி அதற்கு இந்திய அர சின் பரிந்துரையும் பெற்று பாதுகாப்பாக இருக்கிறார்.
இப்படிப்பட்ட ஊழல் பேர்வழிகளை பாதுகாக்கும் அரசுதான் மோடியின் ஒன்றிய அரசு. மோடி கட்சி யான பிஜேபியின் பல மாநில தலைவர்கள், முதலமைச் சர்கள் செய்திருக்கும் ஊழல்களை தனியே பட்டியல் போடலாம். மேற்கண்ட பெரும் பணக்காரர்களின் ஊழலுக்கு துணை போன அரசுதான் பாஜக அரசு ஊழலை ஒழிக்கப் போவதாக நாடகம் போடும் இந்த உத்தமர்களை புரிந்து கொள்ளுங்கள்!
இப்படித்தான் பல கிரிமினல் குற்றவாளிகள் – தங்கள் மீது பல்வேறு வழக்குகள் இருக்கக்கூடிய அவர்கள் பாஜகவில் சேர்ந்து தங்களை சுத்தப்படுத்திக் கொண்டுள்ளது வெட்கக்கேடான செயல்பாடு அல் லவா – கிரிமினல்களை சுத்தமாக்கும் புண்ணிய தீர்த் தமா பாஜக?
கிரிமினல்களின் கூடாரம் பாஜக. நாட்டை நல்வழி யில் நடத்திச் செல்ல பாஜகவை வீழ்த்தி மோடி கும்பலை வீட்டுக்கு அனுப்பி இந்தியா கூட்டணியை டில்லியில் ஆட்சியில் அமர்த்த வேண்டிய கடமையும், பொறுப்பும் வாக்காளர்களுக்கு உண்டு என்பதை தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் சார்பில் மெத்த பணிவோடு சுட்டிக்காட்டுகிறோம்.
(மயிலாடுதுறையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன்உரை 15.4.2024)