கச்சத்தீவு: தி.மு.க. எதிர்க்கவில்லையா?- பழ.நெடுமாறன் பேட்டி

viduthalai
1 Min Read

கச்சத் தீவு தாரைவார்க்கப்பட்டதை அப்போது மாநில ஆட்சியில் இருந்த திமுக அரசு தடுக்கவில்லையா?
இந்திய அரசும், இலங்கை அரசும் செய்துகொண்ட உடன்பாடு அது. ஒன்றி யத்தில் ஆளும் அரசானது அந்நிய நாடுகளுடன் உடன்பாடு செய்யும் பிரச் னையில் மாநில அரசு தனது ஆட்சேபனையைத் தெரிவிக்கலாம். நேரடியாகச் சண்டையிட முடியாது. இருப்பினும், நாடாளுமன்றத்தில் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மூக்கையா தேவர், திமுகவைச் சேர்ந்த இரா. செழியன், நாஞ்சில் மனோகரன் ஆகியோர் கேள்விகள் எழுப்பி, கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பின்னர், தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் அனைத்துக் கட்சிகளால் விவாதிக் கப்பட்டு, தங்களது எதிர்ப்புகளை பேரவையில் பதிவு செய்தனர். அப்போதைய முதலமைச்சர் கலைஞரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததற்கான அதிகாரபூர்வ ஆவணங்கள் உள்ளன.

-தினமணி, (பக்கம்9) 14.4.2024

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *