தொழிலாளியின் இதயம் செயலிழந்த பின்னரும் நுட்பமான சிகிச்சைமூலம் காப்பாற்றிய மருத்துவர்கள்

2 Min Read

கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையின் சாதனை!

சென்னை,ஏப்.13– இதயம் செயலிழந்த தொழிலாளியை மிகவும் நுட்பமான சிகிச்சை அளித்து கிண்டி கலைஞர் மருத் துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள் ளனர்.
இதுதொடர்பாக மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி கூறியதாவது:
சென்னையைச் சேர்ந்த கூலித் தொழி லாளி பழனி (55), கடந்த 11ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதால், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உயிர் காக்கும் அவசர சிகிச்சைகள் அளிக்கப் பட்டு, இதய ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டது.
திடீரென அவருக்கு இதய செயலிழப்பு (கார்டியாக் அரெஸ்ட்) ஏற்பட்டதால், இதயம் மற்றும் நுரையீரல் மீட்பு சிகிச் சையை (சிபிஆர்) நான்கு சுற்றுகள் அளித் தும், மின் அதிர்வு சிகிச்சை (டிஃப்ரி லேஷன்) அளித்தும் இதயத் துடிப்பு மீட்டெடுக்கப்பட்டது.
பின்னர், உடனடியாக இதய இடை யீட்டு ஆய்வரங்கத்துக்கு அவரை மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதய இடை யீட்டு சிகிச்சை நிபுணர்கள் தருமராஜன், சுரேந்திரன், லிஜு ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் ரத்த நாளத்தின் வழியாக அடைப்பை நீக்கும் சிகிச்சையை அளித்தனர்.

இதய செயலிழப்பு ஏற்பட்டவுடன் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் அவருக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லை. அதனால், இதயம் சுருங்கி விரியும் திறனை இழந்திருந்தது.
இதையடுத்து இன்ட்ரா அய்யோடிக் பலூன் எனப்படும் ரத்த நாள இடையீட்டு பலூனை உள்ளே அனுப்பி அதன் மூல மாக இதயம் முறையாக சுருங்கி விரிய வெளியிலிருந்து முயற்சி எடுக்கப்பட்டது.
இதற்கிடையே, இதய ரத்த நாள அடைப்புகள் சீராக்கப்பட்டு இரு ஸ்டென்ட் உபகரணங்கள் பொருத்தப் பட்டன. பின்னர், இன்ட்ரா அய்யோ டிக் பலூன் வெளியே எடுக்கப்பட்டு அந்த நோயாளியின் இதயம் முறையாக இயங்குவது உறுதி செய்யப்பட்டது. மிகவும் சிக்கலான இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் மேற் கொண்டால் ரூ.8 லட்சம் வரை செலவா கும்.
ஆனால், அவருக்கு இங்கு இலவச மாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *