தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து உரத்தநாடு தெற்கு திராவிடர் கழகம் சார்பில் தீவிர பிரச்சாரம்

viduthalai
1 Min Read

உரத்தநாடு,ஏப்.4- தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பா ளர் ச.முரசொலியை, ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் செல்லம் பட்டியில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம், தெற்கு ஒன்றிய விவசாய அணி தலைவர் மா.மதிய ழகன் தலைமையில் நடைபெற்றது.

திராவிடர் கழகம்

தெற்கு ஒன்றிய கழகத் துணைத் தலைவர் நெடுவை.கு.நேரு அனை வரையும் வரவேற்று உரையாற்றினார். மேற்கு ஒன்றிய செயலாளர் தி.மு.க செயலாளர் செல்லர் ரமேஷ் குமார், ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், மாநில பெரியார் வீர விளையாட்டு கழக செய லாளர் நா.ராமகிருஷ் ணன், இரா.மோகன்தாஸ், ஒன்றிய பெருந்துணைத் தலைவர் கண்ணன், தங்க.வெற்றிவேந்தன் ஆகி யோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், கழகப் பேச்சாளர்.

தஞ்சை இரா.பெரி யார் செல்வன், கழக துணை பொதுச் செயலா ளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு சிறப்புரை யாற்றினார்.
இந்த கூட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், தலைமை கழக அமைப்பாளர் குடந்தை. குருசாமி உள்ளிட்ட இந் தியா கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கழக பொறுப்பாளர் வீர. இளங்கோவன் நன்றி கூறினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *