கடத்தூர் திராவிடர் கழக நகர தலைவரும், பெரியார் பெருந் தொண்டருமான ஆசிரியர் சுப.மாரிமுத்து (வயது 85) அவர்கள் உடல்நிலை குறைவால் நேற்று (1.4.2024) மதியம் 2 மணி அளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அவரது உடலுக்கு இன்று (2.4.2024) காலை 10 மணி அளவில் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் தலைமையில் கழகத் தோழர்கள் புடைசூழ மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தப் பட்டது.
வருந்துகிறோம் கடத்தூர் நகரத் தலைவர் ஆசிரியர் சுப. மாரிமுத்து மறைவு

Leave a Comment