திண்டிவனத்தில் தமிழர் தலைவர் பரப்புரைப் பயணப் பொதுக் கூட்டம் துரை.இரவிக்குமாருடன் கழகப்பொறுப்பாளர்கள் சந்திப்பு

1 Min Read

இந்தியா கூட்டணியின் விழுப்புரம் நாடாளுமன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் துரை.இரவிக்குமார் அவர்களை, திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் தா.இளம்பரிதி, திண்டிவனம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.அன்பழகன், மாவட்டச்செயலாளர் செ.பரந்தாமன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் வழக்குரைஞர் தா.தம்பிபிரபாகரன், விழுப்புரம் ச.பழனிவேல், திண்டிவனம் மாவட்ட அமைப்பாளர் பா.வில்லவன் கோதை, திண்டிவனம் நகரத் தலைவர் உ.பச்சையப்பன் ஆகியோர் சந்தித்து, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய “மக்கள் விரோத பா.ஜ.க.அரசை விரட்டியடிப்போம்” என்ற புத்தகத்தை வழங்கினார்கள். 12.4.2024 அன்று திண்டிவனத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பரப்புரை கூட்டம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை தெரிவித்து விடைபெற்றார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *