சந்திரயான் திட்டத்துக்கு மூடநம்பிக்கை சாயம் பூசாதீர்கள்: ஆ.ராசா

2 Min Read

அரசியல்

புதுடில்லி, செப் 22- சந்திரயான்-3 திட்ட வெற்றி தொடர்பாக மக்களவை யில் நேற்று (21.9.2023) விவாதம் நடந்தது. அதில், தி.மு.க. உறுப்பினர் ஆ.ராசா பேசியதாவது:- நிலாவுக்கு விண்கலம் அனுப்பிய அமெரிக்கா, ரசியா, சீனா ஆகிய நாடுகள் பட்டி யலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. 

1950ஆ-ம் ஆண்டுவரை, பிரபஞ்சமும், விண்மீன் மண்டலமும் புதிராக கருதப்பட்டன. ஆனால், சந்திரயான்-3 விண்கலத்தை சரியான சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தியதன் மூலம், புராண கட்டுக்கதை தகர்க்கப்பட்டுள்ளது. இது, திராவிட கொள்கைக்கு கிடைத்த வெற்றி. சந்திரயான் திட் டத்துக்கு அறிவியலுக்கு புறம்பான சாயம் பூசாதீர்கள். அமெரிக் காவோ, சீனாவோ, ரசியாவோ அப்படி செய்யவில்லை. சந்திரயான்-3 திட் டத்துக்கு விக்ரம் சாராபாய் பெயரை சூட்டுங்கள்.

அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் ஏற்படும் முன்னேற்றங் கள், சமூகத்துக்கு பலன் தருவதாக இருக்க வேண்டும். ஒருபுறம் சந்திர யானை விண்வெளிக்கு அனுப்பு கிறார்கள். மற்றொரு புறம், விஸ்வ கர்மா திட்டத்தை தொடங்கியதற் காக பிரதமர் பெருமைப்படுகிறார். விஸ்வகர்மா திட்டம், பாரம்பரிய கைவினை தொழில்களை செய்ப வர்கள், அதே தொழிலேயே செய்ய ஊக்குவிக்கிறது என்று அவர் பேசினார்.

பா.ஜனதா உறுப்பினர் நிஷி காந்த் துபே, ஆ.ராசாவின் பேச் சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசியதாவது:-

ஒருவர் தனக்கு பிடித்த மதத்தை பின்பற்ற அரசியல் சட்டத்தின் 25ஆ-வது பிரிவு அனுமதிக்கிறது. அவர்களின் மத நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், ஆ.ராசா எங்களை தாக்கு கிறார். நாங்கள் ஸ்நாதன தர்மத்தை பின்பற்றுகிறோம். நாங்கள் இந்து. எங்களை தாக்க உங்களுக்கு உரிமை கிடையாது என்று அவர் பேசினார்.

மக்களவைத் தலைவர் இருக் கையில் இருந்த ராஜேந்திர அகர் வால், ஆ.ராசாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

விவாதத்தில், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா ராய் பேசியதாவது:- சந்திரயான்-3, நிலவில் தரை இறங்கியதை டி.வி. யில் பார்த்தோம். திடீரென பிரத மர் மோடியின் புகைப்படம் திரை யில் தோன்றியது. சந்திரயான்-3 திட்ட வெற்றி, எந்த தனிநபரின் முயற்சியாலும் ஏற்பட்டது அல்ல. நேரு, இந்திரா காந்தி, அறிவியலா ளர் விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், யு.ஆர்.ராவ் போன்றவர் களின் முயற்சியால் ஏற்பட்டது. பாரதீய.ஜனதாவுக்கு இதில் எந்த பங்கும் இல்லை என்று அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *