சென்னை, மார்ச் .29 தேர்தல் சின்னம் விவகாரத்தில் பிரதமர் மோடி எழுதி கொடுப் பதைத் தான், தேர்தல் ஆணை யம் அறிவிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவர் நேற்று (28.3.2024) செய்தியாளர் களிடம் கூறியதாவது: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என பேசியுள்ளார். கை சின்னம் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது ஜி.கே.வாசனின் உள் மனது ஆசை.
அந்த எண்ணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். தேர்தல் சின்னம் விவகாரத்தில் பிரதமர் எழுதி கொடுப்பதை தான் தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.
முதல்கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் வரும் என்பது தெரிந்து தான் பிரதமர் அத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்து சென்றுள்ளார். தமிழ்நாட்டில் தான் முதல்கட்ட தேர்தல் வரும் என பிரதமருக்கு எப்படி தெரியும்?
திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார், தொலைபேசியில் பேசினேன் திரும்ப வாங்கி விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகளின் மாத ஊதியம் எவ்வளவு தெரியுமா?
சென்னை, மார்ச் 29 நிரந்தர பணி, நிலையான ஊதியம், சலுகைகள் மற்றும் மரியாதை போன்ற காரணத்தினால் பலரும் அரசு வேலையையே இலக்காக கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக ஊதியத்திற்காகவே அரசு வேலையே பெற அதிகம் விரும்புகின்றனர். அரசு வேலைகளில் சிறப்பு வாய்ந்தது மிகிஷி, மிறிஷி மற்றும் மிஸிஷி பதவிகள். 7-ஆவது கமிஷன் நடைமுறைக்கு வந்தபிறகு அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகளின் ஊதியம் முன்பை விட அதிகரித்துள்ளது. அய்ஏஎஸ், அய்பிஎஸ் போன்ற உயர்ந்த பதவிகளில் இருக்கும் அதிகாரிகளின் மாத ஊதிய எவ்வளவு என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
அய்ஏஎஸ் அதிகாரிகள் முதலில் பணியில் சேரும் போது அவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.56,100 வழங்கப்படும். இதுபோக ஜிகி, ஞிகி மற்றும் பிஸிகி ஆண்டுதோறும் உயர்ந்துக்கொண்டே இருக்கும். வயது, அனுபவம் மற்றும் தகுதிக்கு ஏற்ப அதிகாரிகளின் ஊதியம் அதிகரிக்கப்படும். உதாரணமாக ஒரு அமைச் சரின் செயலாளர் பதவியில் இருக்கும் அய்ஏஎஸ் அதிகாரியின் அடிப்படை ஊதியம் சுமார் 2,50,000 வரை இருக்கும். மேலும் அய்ஏஎஸ் அதிகாரியின் பதவிக்கு ஏற்ப தர ஊதியம் ரூ.5,400 முதல் ரூ.10,000 வரை வழங்கப்படும்.
அய்பிஎஸ் அதிகாரிகளை பொறுத்தவரை, முதலில் பணியில் சேரும்போது அடிப்படை ஊதியம் ரூ.56,100 வழங்கப்படும். மேலும் ஜிகி, ஞிகி மற்றும் பிஸிகி ஆகிய வற்றை சேர்த்து மொத்தம் ரூ.67,320 வழங்கப்படும். இதேபோல அய்ஆர்எஸ் அதிகாரிகளின் தொடக்க கால சம்பளமாக ரூ.56,100 வழங்கப்படும். அதிகபட்சம் ரூ.2,25,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.