விடுதலை சிறுத்தைகளுக்கு சின்னம் பானைதான் எழுச்சித் தமிழர் திருமாவளவன் உறுதி

2 Min Read

உளுந்தூர்பேட்டை,மார்ச்.29. வி.சி.கவுக்கு பானை சின்னம்தான், கடைசி நேரத்தில் மாறும் என்ற குழப் பம் வேண்டாம் என்றும் உளுந்தூர் பேட்டை பிரசாரத்தில் தொல்.திருமா வளவன் பேசினார்.

அ.தி.மு.க. எதிரி அல்ல

விழுப்புரம் நாடாளுமன்ற தொகு திக்குட்பட்ட தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிரசாரம் செய் தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த தேர்தலில் அ. தி.மு.க.வை ஒரு எதிரியாகக்கூட தி.மு.க. கூட்டணி – பார்க்கவில்லை. அரசியல் எதிரி யாகவோ, தேர்தல் எதிரியாகவோ நம்முன் அ. தி.மு.க. தென்படவில்லை. மாறாக அகில இந்திய அளவில் பா.ஜனதாவை வீழ்த்தி ஆக வேண்டும்.
ஏனெனில் கடந்த 10 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில் பொதுமக்கள், நாடு வளர்ச்சி அடையவில்லை. மாறாக அதானியும், அம்பானியும். கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் வளர்ச்சி அடைந்துள்ளன.

நமக்கு பானைதான்…
குழப்பம் வேண்டாம்…

பா.ஜனதா கூட்டணியில் உள்ள ஜி.கே.வாசன் கட்சி கேட்ட சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர ணியில் இருப்பதால் ம.தி.மு.க., வி.சி.க.வுக்கு கேட்கும் சின்னம் ஒதுக்கவில்லை. ஆனால் நம்முடைய சின்னம் பானை சின்னம்தான். எந்த குழப்பமும் இல்லை. கடைசி நேரத்தில் சின்னம் மாறிவிடும் என்கிற குழப்பம் வேண்டாம்.
எவ்வளவு வெளிப்படையாக பா.ஜனதாவை எதிர்ப்பவர்களை ஓரங்கட்டி விட வேண்டும் என நினைக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் கலைஞர், ஜெயலலிதா ஆகி யோர் இல்லை என்பதை பயன்படுத்தி எப்படியாவது உள்ளே வந்து காலூன்ற வேண்டும் என பா.ஜனதா கணக்கு போடுகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க. ஆகிய 3 கட்சிகளும் ஒன்றாக இருந்தபோதே தி. மு.க. கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இப்போது அவர்கள் சிதறி கிடக்கிறார்கள். நாம் ஒற்று மையாக இருக்கிறோம். இதனால் 40- க்கு 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை விலை பேசுவதற்காக கிராமம் கிராமமாக வருவார்கள், ஆசை காட்டுவார்கள். அதற்கு ஒரு போதும் இரையாக மாட்டோம். நம்மை யாராலும் விலை பேச முடியாது என்பதை எடுத்துக்காட் டுங்கள்.

-இவ்வாறு அவர் பேசினார். பிர சாரத்தின் போது அமைச்சர் பொன் முடி, எம்.எல்.ஏ.க்கள் மணிக்கண்ணன், உதயசூரியன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *