சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று பிரகடனப்படுத்தப்பட்ட நூற்றாண்டு விழா

viduthalai
4 Min Read

தஞ்சாவூரில் 25.3.2024 மாலை நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட நான்காவது தீர்மானம் வருமாறு:
சிந்து சமவெளி என்பது திராவிட நாகரிகம்தான் என்று (பொ.ஆ.மு. BCE3300-1300) இந்திய தொல்லியல் துறையின் இயக் குநராக இருந்த சர்ஜான் மார்ஷல் என்பவர் 1924 ஆம் ஆண்டில் தொல்லியல் ஆய்வின்மூலம் உலகறியச் செய்தார்.
‘ஆரியம் – திராவிடம்’ என்பதெல்லாம் வெள்ளைக்காரனின் பிரித்தாளும் சூழ்ச்சி என்று பார்ப்பனர்கள் பரப்புரை செய்வதெல்லாம் – ஆரியப் பார்ப்பனர்களின் தந்திரமே என்பது 1924 இல் தொல்லியல் ஆய்வின்மூலம் சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று உறுதி செய்யப்பட்டது. (‘தினமணி’ ஆசிரியர் அய்ராவதம் மகாதேவன் போன்றவர்களும் இதனை ஏற்கின்றனர்).
1924இல் பிரகடனப்படுத்தப்பட்ட திராவிட நாகரிகத் தினையும், அதனை ஆய்வின்மூலம் உலகறியச் செய்த சர்ஜான் மார்ஷலின் கண்டுபிடிப்பையும் வரலாற்றில் நினைவு கூர்வதற்கு அதன் நூற்றாண்டு விழாவினை வரும் டிசம்பரில் சிறப்புடன் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.”
மேற்கண்ட தீர்மானம் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் மிக முக்கியமானது.
திராவிட இனத்தின் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திராவிட நாகரிகத்தின் வயது 2000 ஆண்டு என்றால் எவருக்கும் ஆச்சரியமாகவே இருக்கும்.
ஆனால் அதுதான் உண்மை என்பது தொல் பொருள் ஆய் வாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் நிறுவிய மிகப் பெரிய உண்மை.

சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்பட்ட நகர்ப்புற நாகரிகம் வரலாற்றாளர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த் தியது. அணைகள் கட்டி விவசாயம் செய்ததெல்லாம் சாதாரணமானதல்ல.
ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஆர். பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ்., அவர்கள் 30 ஆண்டு காலம் அரிதின் முயன்று சிந்து சமவெளி நாகரிகம். திராவிட நாகரிகமேயென்று அறுதியிட்டு நிறுவினார். தமிழ் தொன்மங்களில் உள்ள கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற பெயர்கள் சிந்து சமவெளிப் பகுதியான பாகிஸ்தான், அதனையும் தாண்டி ஆப்கான், ஈரான் போன்ற பகுதிகளில் பல இடங்களில் பெயரிலான ஊர்கள் இருப்பதைக் கூறுகிறார் பாலகிருஷ்ணன்.
சிந்து சமவெளியில் புழக்கத்தில் இருந்த எழுத்துகளுக்கும் தமிழ் மொழியில் உள்ள எழுத்துகளுக்கும் இடையே உள்ள பொருத்தப் பாடுகளை தொல்லியல் அறிஞரான அய்ராவதம் மகாதேவன் தன் ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
உண்மைகள் ஆய்வுகள் இவ்வாறு இருக்க வலதுசாரிகள், பார்ப்பனர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தை ஆரிய நாகரிகம் என்று நிறுவிட தலைகீழாக நின்று மூக்கால் தண்ணீர் குடிக்கின்றனர்.

ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் அவர்களால் எழுதப்பட்ட “இந்திய வரலாறு” என்னும் நூலில் (பக்கம் 36) சிந்து சமவெளி நாகரிகத்தை அழித்து ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்கியவர்கள் ஆரியர்கள். அடிமைகள் – எஜமானர்கள் என்ற வர்க்க வேறுபாட்டுக்குப் பதிலாக ஆரம்பத்தில் நான்கு வர்ணங்களும் எண்ணற்ற ஜாதிகளும், உப ஜாதிகளும் அடங்கிய ஓர் அமைப்பை உருவாக்கினர்.
இது நமது சமூக வாழ்க்கையில் இந்தியாவுக்கே உரித்தான ஒரு விசேஷ தன்மையை அளித்தது. அடிமை முறையிலுள்ளது போல, தெளிவானதும், மறக்க முடியாததுமான சுரண்டல் முறைக்குப் பதிலாக வருணாசிரம தருமத்தினுடையவும், ஜாதி ஆச்சாரங்களுடையவும் திரைக்குப் பின்னால் வளர்ந்த மேல் ஜாதி ஆதிக்கம் மேலோங்கி வந்தது. இதற்குப் பாரதீய நாகரிகம், ஹர்ஷ நாகரிகம் என்பது போன்ற செல்லப் பெயர்களும் கிடைத்தன” என்று ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் எழுதுகின்றார்.
வெகு காலத்திற்கு முன்பு போவானேன்? பி.ஜே.பி. ஆட்சியில் ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி முயற்சியில் என்ன நடந்தது?
சிந்து சமவெளியின் திராவிடர் சின்னமாக இருந்த காளையை, குதிரையாக விஞ்ஞான யுக்தியைப் பயன்படுத்தி உருமாற்றிக் காட்டவில்லையா?
நம் கண் முன் நடந்த – நடந்து கொண்டு இருக்கக் கூடிய கீழடி அகழ்வாராய்ச்சி எந்தக் கெதிக்கு ஆளானது என்பதைப் பார்க்க வில்லையா?

2800 ஆண்டுகளுக்கு முற்பட்ட நம்மினத்தின் கருவூலங்கள் கீழடியில் கண்டெடுக்கப்பட்டன. 5700 தொல்பொருள்கள் கண்டெடுக் கப்பட்டன.
இது பார்ப்பனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. ஆய்வுப் பணிகள் திடீரென்று முடக்கப்பட்டன. ஆய்வுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். இதனை எதிர்த்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியதுண்டு.

‘ஆனந்த விகடன்’ இதழே (4.10.2017) குமுறி தலையங்கம் எழுதியதுண்டே!
“தொல்லியல்துறை புகழ் பெற்ற அகழ்வாராய்ச்சியாளரான அமர்நாத் தலைமையில் போதுமான நிலமும், நிதியும் ஒத்துழைப்பும் வழங்கித் தொடர்ந்து நடந்திட வேண்டும். அகழ்வாராய்ச்சிகள் முடிந்து விட்டன என்று போடப்படும் மண். நமது வரலாற்றுக்கும் போடப்படும் மண் என்பதை நாம் உணர வேண்டும்” என்று ‘ஆனந்த விகடனே’ தலையங்கம் தீட்டியதே!
கடுமையான எதிர் விளைவுக்குப் பிறகே கீழடி ஆய்வுப் பணிகள் தொடரப்பட்டன.
வரலாற்றைத் திரிப்பது புராணங்களை வரலாறு என்று கூறுவதெல்லாம் பார்ப்பனர்களுக்கே உரித்தான கைவந்த
க¬(ள)ல!
இவற்றையெல்லாம் வெளிக் கொணர்ந்து மக்கள் மத்தியில் வெளிச்சத்தைக் கொண்டு வரத்தான் சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று பிரகடனப்படுத்தப்பட்டதன் நூற்றாண்டு விழாவை திராவிடர் கழகம் நடத்திட உள்ளது. இன உணர்வாளர்கள் – ஆய்வாளர்கள் இந்த முயற்சிக்கு போதிய ஒத்துழைப்பையும், ஆதரவுக் கரங்களையும் நீட்டுவார்களாக!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *