ம.தி.மு.க.வின் திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் துரை வைகோ தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார்

1 Min Read

— நாடாளுமன்ற தேர்தல் 2024 – இந்தியா கூட்டணியில் மதிமுக சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் துரை வைகோ திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து பொன்னாடை போர்த்தினார். துரை வைகோவிற்கு ஆசிரியர் புத்தகத்தை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் பங்கேற்றார்.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்
— தந்தை பெரியார் நினைவிடத்தில் வைகோ, துரை வைகோ மற்றும் முக்கிய நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பிரின்சு என்னாரெசு பெரியார், கோ. கருணாநிதி, ஆடிட்டர் அர்ஜூன் ராஜ், மல்லை சத்யா, வழக்குரைஞர் அந்திரி தாஸ், ஆ.வந்தியத்தேவன், டாக்டர் ரொஹையா, மு. செந்தில் அதிபன், மாவட்டச் செயலாளர்கள் ஜீவன், சைதை சுப்பிரமணியன் (பெரியார் திடல் – 19.3.2024).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *