புதுச்சேரி ஏம்பலத்தில் தந்தை பெரியார் படம் – இல்லம் திறப்பு விழா

viduthalai
1 Min Read

புதுச்சேரி, மார்ச் 18- புதுச்சேரி, நெட்டப் பாக்கம் கொம்யூன் தலைவர் தெ.தமிழ்நிலவன் (எ ) பக்கிரியின் அன்னை இல்லம் அறிமுக விழா 13.03.2024 புதன் கிழமை காலை 8.00 மணியளவில் ஏம்பலத்தில் நடைபெற்றது.
புதுவை மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி தலைமையில் மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் இளைஞரணித் தலைவர் தி.இராசா ஆகியோர் முன்னிலையில் விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச் செல்வன் வரவேற்புரை ஆற்றி னார். மாவட்டச் செயலாளர் கி.அறிவழகன் தந்தை பெரியார் படத்தினைத் திறந்து வைத்தார். புதிய இல்லத்தை பொதுக்குழு உறுப்பினர் விலாசினி இராசு திறந்து வைத்தார். தந்தை பெரியார் அறவைக் கூடத்தினை மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் இல.பெரியசாமி திறந்து வைத்தார்.

மாநில எழுத்தாளர் மன்றத் துணைப் பொதுச் செயலாளர் இளவரசிசங்கர் வாழ்த்துரை வழங் கினார். கொம்யூன் செயலாளர் தெ.குமார் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியினை விடுதலை வாச கர் வட்டச் செயலாளர் ஆ.சிவ ராசன் ஒருங்கிணைந்தார். நிகழ்ச் சியில் காப்பாளர் இர.இராசு, உழ வர்கரை நகராட்சித் தலைவர் சு. துளசிராமன், புதுச்சேரி நகராட்சி தலைவர் மு. ஆறுமுகம், அரியாங் குப்பம் கொம்யூன் தலைவர் செ. இளங்கோவன், தொழிலாளரணிச் செயலாளர் கே.குமார், பகுத்தறி வாளர் கழகச் செயலாளர் பா.கும ரன், ஜே. வாசகி, ஊடகவியலாளர் பெ.ஆதிநாராயணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ப.தனலட்சுமி – கலா, இலக்கியன், இளவரசன், சிலம்பரசன், அருட் செல்வன் ஆகி யோர் அனைவரையும் வரவேற்று அசைவ சிற்றுண்டி வழங்கி சிறப் பித்தார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *