உச்சநீதிமன்றம் இடித்துரைத்தபின் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் வெளியீடு!

2 Min Read

புதுடில்லி, மார்ச் 15- தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட் சிகள் நிதி பெறுவது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி இந்த தேர்தல் பத்திரங்கள் முறையை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 15ஆம் தேதி ரத்து செய்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி மற்றும் நிதியை கொடுத்தவர்களின் விவரங்களை வெளியிடவும் எஸ்.பி.அய். வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதோடு எஸ்.பி.அய். வங்கி தாக்கல் செய்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை மார்ச் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து உச்சநீதிமன்றம் உத்தரவின்படி இந்திய தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்தி ரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.அய். வங்கி வழங்கியது. அதில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2024 பிப் ரவரி 15ஆம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற் பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 22,030 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், எஸ்.பி.அய். வங்கி தாக்கல் செய்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங் களை அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் இந்திய தேர்தல் ஆணை யம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்த நிறுவனங்களின் பெயர்கள், நிதியை பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் பெறப்பட்ட தொகை குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்படி பா.ஜ.க., காங்கிரஸ், அ.தி.மு.க., பி.ஆர்.எஸ்., சிவசேனா, தெலுங்கு தேசம் கட்சி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தி.மு.க., ஜே.டி.எஸ்., தேசியவாத காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், ஜே.டி.யு., ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றுள்ளதாக தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அரசியல் கட்சி களுக்கு நிதி அளித்த நிறுவனங்களின் பெயர்களும் வெளியிடப்பட் டுள்ளன. அதில் இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய வணிக நிறுவனங்களான அதானி மற்றும் ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *