கடந்த 10 ஆண்டுகளில்…. ஒவ்வொரு குடிமகன்மீதும் 266 மடங்கு கடன் அதிகரித்துள்ளது

viduthalai
1 Min Read

கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டு நேரடி முதலீடு 596 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதென நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் உரையின் போது கூறியுள்ளார்
ஒரு பில்லியன் = 100 கோடி 596 ஜ் 100 = 59 ஆயிரத்து 600 கோடி டாலர் அதை இந்திய மதிப்பில் கணக்கிட்டால் 47 லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வெளிநாட்டு நேரடி முதலீடு கிடைத்துள்ளது.
அதே 10 ஆண்டுகளில் இந்திய ஒன்றிய அரசு வெளிநாடுகளில் இருந்து வாங்கியுள்ள கடன் எவ்வளவு என்று பார்க்கலாமா!
30/11/2023 அன்று நிதியமைச்சகம் கொடுத் துள்ள பதிலின் படி ரூபாய் 159.5 லட்சம் கோடி
1947 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து 2014ஆம் ஆண்டு வரையிலான 67 ஆண்டு காலத்தில் இந்தியா வாங்கியிருந்த மொத்த வெளிநாட்டு கடன் தொகை ரூபாய் 58.6 லட்சம் கோடி மட்டுமே 2023 ஜூன் மாதத்தில் ரூபாய் 159.5 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது.
அதாவது,
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ரூபாய் 101 லட்சம் கோடி வெளிநாட்டு நாடுகளிடம் இருந்து கடனாக பெறப்பட்டுள்ளது
10 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த முதலீடு – ரூ.47 லட்சத்து 68 ஆயிரம் கோடி அதே 10 ஆண்டுகளில் இந்தியா வாங்கியுள்ள கடன் ரூ.101 லட்சம் கோடி இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது? 30.11.2023ஆம் தேதி நிதியமைச்சகம் கூறியுள்ள கணக்கின்படி பார்த்தால் இந்தியர்களின் மீதான கடன் சுமை 2014இல் ரூ.45,000 2023இல் ரூ.1,12,000 அதாவது 266 மடங்கு கடன் ஒவ்வொரு குடிமகனின் மீதும் அதிகரித்துள்ளது.

– சமூக வலைதளத்திலிருந்து….

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *