ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒன்றிய சட்ட ஆணையம் ஆதரவாம்

2 Min Read

புதுடில்லி, செப்.28 ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான அறிக்கையை சட்ட ஆணையம் விரைவில் ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நாடாளுமன்ற மக்களவை, அனைத்து சட்டப்பேரவைகள் மற் றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் நேரம் மற்றும் தேர்தல் செலவை குறைக்க முடியும் என ஒன்றிய அரசு கருதுகிறது. 

இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21-ஆவது சட்ட ஆணையம் ஒரு வரைவு அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த லாம் என பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில், இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்ய மேனாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த செப்.2-ஆம் தேதி உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை மேனாள் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள் ளனர்.

இந்தக் குழுவின் முதல் கூட்டம் கடந்த 23-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் இது குறித்து ஒன்றிய சட்ட ஆணையம், தலைமை தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்பது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், 22-வது சட்ட ஆணையம் 3 அறிக்கைகளை ஒன் றிய அரசிடம் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளி யாகி உள்ளது. அதில், ஒன்று ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர் பானது ஆகும். இந்த திட்டத்தை வரும் 2024 மற்றும் 2029ஆ-ம்   ஆண்டுகளில் அமல்படுத்தலாம் என பரிந்துரை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

போக்சோ வயது: இதுபோல பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட் டத்தின் (போக்சோ)கீழ் குறைந்த பட்ச வயது நிர்ணயம் மற்றும் முதல் தகவல் அறிக்கையை இணைய வழியில் பதிவு செய்வது ஆகிய மேலும் 2 விவகாரங்கள் குறித்த அறிக்கையையும் சட்ட ஆணையம் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப் படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *