ராமேசுவரத்தில் தொழிலாளர் அணி கலந்துரையாடல்

viduthalai
1 Min Read

திராவிடர் கழக தொழிலாளரணி செயலாளர் திருச்சி. மு.சேகர், தொழிலாளர் கழகப் பேரவைத் தலைவர் கருப்பட்டி.கா.சிவா ஆகியோரது சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்வு 3-3 – 2024 காலை 10 மணி அளவில் ராமேஸ்வரம் உதயா தங்குமனையில் திராவிடர் கழக தொழிலாளர் அணியின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கத்தில் அதிகப்படியான உறுப்பினர்களை தமிழ்நாடு அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்கள் ஆக்கி தொழி லாளர் நல ஆணையத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை முறையாக பெற்றுத் தரவும் ஏற்கனவே, பதிவு செய்து புதுப்பிக்காத நபர்களின் உறுப்பினர் அட்டைகளை புதுப்பித்து தருவது என்றும் தீர்மானிக்கப் பட்டது. அதேபோல ராமேஸ்வரம் தங்கச்சி மடம், பாம்பன் ஆகிய பகுதிகளிலும் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங் கத்தை நிறுவிட ஏற்பாடு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *