பி.ஜே.பி. எச். ராஜா பிறந்தநாள் கூட்டம் அடிதடி மோதல்

Viduthalai
1 Min Read

அரசியல்

திருப்புவனம், அக்.1 சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா முன்னிலையில் அக்கட்சி நிர்வாகிகள் கைகலப்பில் ஈடுபட்டதால் அவர் தனது பிறந்தநாள் விழாவில் பங்கேற்காமல் பாதிவழியில் திரும்பினார். 

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பிறந்தநாளை யொட்டி நேற்றுமுன்தினம் (29.9.2023) இரவு திருப்புவனம் மணிமந்திர விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாட்டுக்கு பாஜகவினர் ஏற்பாடு செய் திருந்தனர். இந் நிகழ்ச்சிக்கு வந்த எச்.ராஜாவுக்கு பாஜக கூட்டுறவு பிரிவு மாநிலச் செயலாளர் பாலரவி ராஜன் தலைமையில் அவரது ஆதர வாளர்கள் வரவேற்பு கொடுத்தனர்.

அப்போது அங்கு வந்த ஒன்றியத் தலைவர் மோடி பிரபாகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், எச்.ராஜாவிடம் தங்களுக்கு தெரிவிக்காமல், நிகழ்ச்சியை எப்படி நடத்தலாம் என்று கேட்டனர். இதில் பாலரவிராஜனுக்கும், மோடி பிரபாகர னுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பானது. 

இதில் பாலரவிராஜனின் சட்டை கிழிந்தது. இதனால் எச்.ராஜா அதிருப்தி அடைந் தார்.அங்கிருந்த காவல்துறையினர் பாஜக நிர்வாகி களை சமரசப்படுத்தியதோடு, எச்.ராஜாவையும் பாதுகாப்பாக காரில் அனுப்பி வைத்தனர். இதனால் கோயில் வழிபாட்டில் பங்கேற்காமலும், தொடர்ந்து கொந்தகை பகுதியில் நடக்கவிருந்த பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு செல்லாமலும், பாதி வழியில் திரும்பிச் சென்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *