ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்! ராகுல் காந்தி

Viduthalai
1 Min Read

ஜெய்ப்பூர்,நவ.22- எந்த ஜாதியினரின் எண்ணிக்கை எவ் வளவு என்று தெரியாமல் அவர்களுக்கான நலத்திட்டங் களை எவ்வாறு செயல்படுத்த முடியும். ராஜஸ்தானில் காங்., ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரசு கட்சியின் மேனாள் தலைவரும், மக்க ளவை உறுப்பினருமாகிய ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளராக கண்ணையா மீண்டும் தேர்வு

சென்னை, நவ. 22- எஸ்.ஆர்.எம்.யூ. எனப்படும் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில், சென்னையில் நடைபெற்ற பொது மகா சபைக் கூட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச் செயலாளராக என்.கண்ணையா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைவராக ராஜா சிறீதர் ஒருமனதாக தேர்வு செய்யப் பட்டார். இதுதவிர, கோட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மீண்டும் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கண்ணையாவுக்கு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஓட்டுநர் உடன் நடத்துநர் பணிக்கான விடை குறிப்புகள் வெளியீடு

அரசு போக்குவரத்து துறை தகவல் 

தமிழ்நாடு

சென்னை, நவ. 22- தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம்  சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் உடன் நடத்துநர் பதவிகளை நேரடி நியமனம் மூலமாக நிரப்பும் பொருட்டு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டு தகுதி பெற்றவர்களுக்கும், இணையம் மூலம் விண்ணப்பித்தவர்களில் தகுதி பெற்றவர்களுக்கும் சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய எழுத்துத்தேர்வு கடந்த 19ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் 20 தேர்வு மய்யங்களில் நடைபெற்றது. இந்த எழுத்துத் தேர்வுக்குரிய விடைக்குறிப்பு அண்ணா பல்கலைக்கழக இணையதளம் www.tancet.annauniv.edu/tancet/ setc/index.php-ல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, எழுத்துத்தேர்வு மதிப்பெண்களை இணையதளத்திலேயே இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *