பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

2 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, அக்.6  அமைப்புசாரா ஓட்டுநர்கள், மோட்டார் வாகனம் பழுதுபார்க்கும் தொழிலா ளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 148 பெண்கள், 2 திருநங் கைகளுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் ஆட்டோக்கள், தொழில்முறை டாக்ஸி ஆகிய வாகனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். 

‘தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள், மோட்டார் வாக னங்கள் பழுதுபார்க்கும் தொழி லாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றபெண் ஓட்டுநர்கள் சொந் தமாக ஆட்டோ வாங்குவதை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு சுயதொழில் வாய்ப்பை உரு வாக்கி, வருமானம்,வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையிலும், 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதி தாக ஆட்டோ வாங்கும் செல வினத்தில் தலா ரூ.1 லட்சம் மானி யமாக வழங்கப்படும்’ என்று சட்டப்பேரவையில் 2022_20-23-ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 10ஆ-ம் தேதி 10 பெண் பயனாளிகளுக்கு புதிய ஆட் டோவுக்கான பதிவு ஆவணங்கள், அனுமதி ஆவணங்களை வழங்கி, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். திருநங்கை ஓட்டுநர் களுக்கும் இந்த மானியத் திட்டம் நீட்டிக்கப்படுவதாக ஆக.15-ஆம் தேதி சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் அறிவித்தார்.

 மின்சாரம், சிஎன்ஜி, எல்பிஜியில் இயங்கும் ஆட்டோ மட்டுமின்றி, தொழில்முறை டாக்ஸி வாங்குவது மற்றும் திருநங்கை ஓட்டுநர்களுக்கும் இத்திட்டத்தை நீட்டித்து ஆக.16ஆ-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலை யில், சென்னை தீவுத்திடலில் நேற்று (5.10.2023) நடந்த விழாவில், ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ், 148 பெண் ஓட்டுநர்கள், 2 திருநங்கை ஓட்டுநர்கள் வாங்கியுள்ள புதிய ஆட்டோ, தொழில்முறை டாக்ஸி ஆகிய வாகனங்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து, அவர்களிடம் வழங்கி னார். அவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கினார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர் பாபு, சி.வி.கணேசன், சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, துணை மேயர்மகேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். அரவிந்த் ரமேஷ், ஏஎம்வி பிரபாகர ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *