கடவுள் சக்தி எங்கே?

1 Min Read

கடவுள் சக்தி எங்கே?
அம்பத்தூர் அருகே
3 கோவில்களில் திருட்டு

அம்பத்தூர், பிப்.18- அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு மேட்டூர் பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலுக்குள் புகுந்த அடை யாளம் தெரியாத நபர்கள், உற்சவர் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த 2 கிராம் தங்க நகையை திருடிச்சென்று விட்டனர்.
அதே பகுதியில் உள்ள எல்லையம்மன் கோவில் மற்றும் சூரப்பட்டு எழில் நகரில் உள்ள விநாயகர் கோவிலின் உண்டியலையும் அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை அள்ளிச் சென்றுள்ளனர்.
ஒரே நாள் இரவில் சூரப்பட்டு பகுதியில் 3 கோவில்களில் நடைபெற்ற திருட்டு நிகழ்வு தொடர்பாக அம்பத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைரேகைகளை வைத் தும், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் அடையாளம் தெரி யாத நபர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *