பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப்பல்கலைக் கழகம்) பெரியார் கலைவிழா

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில்
(நிகர்நிலைப்பல்கலைக் கழகம்) பெரியார் கலைவிழா

தமிழ்நாடு, திராவிடர் கழகம்
வல்லம், பிப்..18- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பெரியார் கலை ழா நடை பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாணவர் அமைப்பின் தலைவர் வி.சுமையா வரவேற்புரை நிகழ்த்தினார். பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.வெ.இராமச்சந்திரன் தலைமையுரையில் இயல், இசை, நாடகம் ஆகியவற்றில் வர லாற்று சிறப்புமிக்க மாவட்ட மாக நமது தஞ்சாவூர் சிறந்து விளங்குகிறது என்றும் மேலும் மாணவர்கள் தங்களுடைய ஆளுமைத் திறமைகளை வெளிக் கொணர்வதற்காக நடத்தப்படும் கலைவிழாவாகும் எனவும் கூறினார்.

இதனை தொடர்ந்து பல் கலைக்கழக பதிவாளர் பேராசிரி யர் பிகே.சிறீவித்யா உரையாற் றும் போது: மாணவர்கள் படிப் பில் மட்டுமல்லாது அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் கலைவிழாவாக பெரியார் விழா இருக்கின்றது என்று கூறி வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த் துகளை கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு கல்வி வளர் மணி விருதுபெற்ற மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ஜி.சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போது சமத்துவ வாழ்க்கைதான் வாழ்க்கை என்றும் தந்தை பெரியாரை பற்றிய பாடல்களை பாடி பெருமைபடுத்தினார். அக் காலத்தில் உள்ள வாழ்க்கை முறைக்கும் மற்றும் இக்கால வாழ்க்கை முறைக்கும் உள்ள வேறுபாட்டினை பாடல்கள் மூலம் வெளிக்கொணர்ந்தார். வெற்றிபெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் கள் வழங்கப்பட்டன.
இறுதியாக பல்கலைக்கழக மாணவர் தலைவர் எஸ்.மணிஸ் குமார் நன்றியுரையாற்றினார். இதனையடுத்து கலைநிகழ்ச்சி நிறைவுபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *